இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
பூமியின் புன்னகை
பேரன் பேத்திகள்
பெரிதும் மொய்த்துத்
தாரம் பாட்டியாய்த்
தாத்தா நானாய்த்
தரணியில் என்கதை
தருகிற முடிவைச்
சுரணை யின்றியே
தேடியலுத்த பின்
இன்னும் தேட
எதுவோ மீதம்
இன்னும் தேட
எதுவோ மீதம்?
தேடலில் அலுத்தேன்
தேகமும் சலித்தேன்
ஓடமுடியாக் கால்களால்
உன்னையும் தேடவா?
தேடுவ தொன்றே நோயாகித்
திகைத்தும் வருந்தியும்
வாடினேன் என்னைத்
தேடிடும் காலனச்
சேரும் முன்னதாய்
செகத்தினுள் தனியே
இன்னும் தேட எதுவோ மீதம்
இனியும் தேட எதுவோ மீதம்!