பக்கம்:பூமியின் புன்னகை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நானே ராஜா


•ரோஜாப்பூ மாலையுடன் மலர்ச்செண்டும்
நீர்தந்தீர்! நல்வெள்ளிப் பேழையினில்

தேஜோமயப் பொற்சாவி யினைவைத்துத்
திறப்புவிழா நடத்துவதற்கு அழைத்திட்டீர்!

ஒகோவென் றுயரத்திற் பறக்கின்ற
உல்லாச விமானத்தில் தனியேவந்து

ஆகாவென்று அதிசயிக்கத் திறந்துவைத்தேன்
ராஜாக்கள் மானியத்தை ஒழித்துவிட்டேன்.

அரண்மனை பெரும்பூங்கா தனிவிமானம்
அந்தரங்கச் செலவினங்கள் சொந்தக்கார்

சரணடையும் பணியாட்கள் இவைஎல்லாம்
ஜனநாயக முறைப்படியே எனக்குவேண்டும்

முரணடையாக் கொள்கைவழி நடந்தாலும்
முதன்மைச் சுகபோகம் ஜபர்தஸ்து