இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
68
பூமியின் புன்னகை
உண்டாக்கி விட்டுவிடுகின்றன போலும்.
எவ்வளவோ முயன்றும் நாற்காலிகளையும்
மனிதர்களையும் சேர்த்துக் கணிப்பதோ,
புரிந்து கொள்வதோ சிரமமாயிருக்கிறது.
கோளாறு எங்கே என்று தேடினேன்.
கால்களில் என்பது எண்ணிப்புரிந்தது.
இரண்டுகால் நாலுகாலில் அமர்ந்தால்
சகவாச தோஷமாகிறது.
நாலுகால் இரண்டுகாலை உட்கார
விட்டாலும் சகவாச தோஷ மாகிறது.
இது மேல் மாறாட்டமா? கால் மாறாட்
டமா அல்லது ஆள் மாறாட்டமா?