இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
• இருபதாம் நூற்றாண்டின்
- பாவ புண்ணியங்களைப்
பெரும் பான்மை சிறுபான்மையால்
- மனிதர்களே நிர்ணயிக்கிறார்கள்
குற்றம் நிரூபிக்கப்பட்ட நிரபராதிகள்
- விசாரணைக்குப் போகிறார்கள்
நிரூபிக்கப்படாத குற்றவாளிகள்
- தொடமுடியாத உயரத்தின் மேல்
பதவிகளிலே இருக்கிறார்கள்
- சாட்சியில்லாத உண்மைகளைப்
பொய்களாகச் சித்திரிக்கிறார்கள்
- சாட்சியுள்ள பொய்களையே
- உண்மைகளாகக் காட்டுகிறார்கள்
ஆம்!