பக்கம்:பூமியின் புன்னகை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




நிர்ணயம்


• இருபதாம் நூற்றாண்டின்

பாவ புண்ணியங்களைப்

பெரும் பான்மை சிறுபான்மையால்

மனிதர்களே நிர்ணயிக்கிறார்கள்

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிரபராதிகள்

விசாரணைக்குப் போகிறார்கள்

நிரூபிக்கப்படாத குற்றவாளிகள்

தொடமுடியாத உயரத்தின் மேல்

பதவிகளிலே இருக்கிறார்கள்

சாட்சியில்லாத உண்மைகளைப்

பொய்களாகச் சித்திரிக்கிறார்கள்

சாட்சியுள்ள பொய்களையே
உண்மைகளாகக் காட்டுகிறார்கள்

ஆம்!