இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
• சங்கீத சபைகளிலே பலர் கூடி
சாஸ்த்ரீய இன்னிசையை
இங்கிதமாய்ப் பாடிப் பேசி
எடுத்துரைத்துக் கொண்டாடும்
மங்காத டிசம்பர் மாதந்தான்
மகத்தான இசைக்கலையை மற்
றெந்நாளும் மறப்பதற்காய் வசமாக
இந்நாளில் கொண்டாடும் திதியாகும்.
பாட்டறியாப் பட்டினத்து வியாபாரிகள்
பக்கத்திலமர்ந்து தலையாட்டி
கேட்டறியா ஊர்வம்பு பலப்பலவும்
கிளந்திடவும் அளந்திடவும் ஏற்ற
கோட்டமென இசையரங்கு பயனாகும்
குமரிகளும் கிழவிகளும் அணியணியாய்