பக்கம்:பூமியின் புன்னகை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

83


கங்கையும் யமுனையும் கலந்து பாய்ந்தும்
காடும் மலைகளும் கணக்கற் றிருந்தும்
தண்ணீர்ப் பஞ்சமும் வெள்ளக் கொடுமையும்
சரிசமமாக உயிர்களைப் பலிகொளல் இங்கு சர்வசா
தாரணம்

உண்ணச் சோறும் உடுக்கத் துணியும்
கண்ணியமாகப் பார்த்திட வேலை என்றொன்றும்
கனவில் கூடப் பெறமுடியாத காவியபூமி

“பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற் றாதீர்”
இந்தியா எங்கள் இந்தியா ஆம்இது எங்கள் இந்தியா
மனிதர்களைக் காட்டிலும் மனிதர்களைப் பார்க்கிலும்

மியூஸியங்களும் மிருகக் காட்சிசாலைகளும் மிகுந்த
இந்தியா
செத்த காட்சியும் உயிர்க்காட்சியும் சேர்ந்த இந்தியா!
(1982)—


※※