இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா.பா.
89
பலமொழிப் புலவோர் ‘பட்டை’ யடிப்போர்
யாவரும் அடங்குவர் அதனால் பணிவுடன்
பேட்டை ரவுடி பெருமாள் சாமியும் நான்
பயப்படும் லிஸ்டில் அகப்படும் ஓராள்
விலகி நின்று வேற்றாள் போல் வணங்கிப்
பன்மொழிப் புலவர்களைப் பணிந்து ஒதுங்கலே
நன்னெறி என்று நம்பிடும் பேதை நான்
பேட்டை ரவுடி பெருமாள் சாமியோ
அந்திக்கு மேலே அரையாடை சரியப்
புரியாத மொழிகளுடன் சந்திக்கு வருமோர்
சரித்திர நாயகன் சகலபாஷா ஞானி!