இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
• இந்த நூற்றாண்டின் இந்திய இளைஞனே!
இப்போது நீ எந்த இடத்தில் நிற்கிறாய்?
ஆன்மீகத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் நடுவிலா?
அறியாமைக்கும் அறிவுக்கும் நடுவிலா?
நேற்றைய அவநம்பிக்கைகளுக்கும்
இன்றைய சிரமங்களுக்கும் நடுவிலா?
நீ நிற்கும் இடம் உனக்குப்புரிகிறதா?
அவநம்பிக்கைகள்தான் உன் முன்னோர்
உனக்கு அளித்த பிதிரார்ஜிதங்களா?
சிரமங்கள் தான் நீ உனக்கென்றே
தேடிக் கொண்ட புதுச் சொத்துக்களா?
நீ நிற்கும் இடம் உனக்குப் புரிகிறதா?
சாலை விதிகளைச் சரியாகப் புரிந்துகொள்!
சாலைகளின் நடுவே நிற்கக்கூடாது!