பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பூர்ணசந்திரோதயம்-1 அவ்வளவு தந்திரமாகவும், ரகசியமாகவும் தம்மை அங்கே கொணர்ந்த விஷயம் அவரது மனதில் பலவகையான சந்தேகங்களையும் பிரமிப்பையும் உண்டாக்கி, அவர்கள் தம்மை எவ்விதமாக வஞ்சிக்க எண்ணுகிறார்களோ என்றும், தமக்கு ஏதேனும் துன்பம் இழைக்கப் போகிறார்களோ என்றும் அவர் நினைக்கும் படி செய்தது. அவர் மறுபடியும் அவளது முகத்தை உற்று நோக்கினார். அந்த முகம் அப்போதும் முன்போலவே மோகலாகிரியினால் நைந்திருப்பது நன்றாகத் தெரிந்தது. அவளது அற்புதமான ஒவ்வோர் அங்கமும், அவரது கண்களைக் குளிர்வித்து மனதை ரமிக்கச் செய்ததாகையால் அவர் மிகுந்த ஆவேசம் கொண்டவராய் அவளை நோக்கி, 'இவ்வளவு சிரமப் பட்டு என்னை வருந்தியழைத்து எனக்குக் காட்சி கொடுக்கும் இந்தப் பெண் தெய்வம் யாரென்பது தெரியவில்லையே! கல்லினாலும் செம்பினாலும் செய்யப்பட்ட தெய்வமெல்லாம் பேசாத தெய்வங்கள். அந்தத் தெய்வங்களை யெல்லாம் மனிதர் வணங்குவதைவிட இந்தப் பேசுந் தெய்வத்தை வணங்கினால், இது உடனே மோகrம் கொடுத்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகையால், என்னை வரவழைத்த தெய்வம் இல்லை என்னாமல் எனக்குப் பரிபூரணமான வரங்களை யெல்லாம் கொடுக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்” என்று கூறியவண்ணம் அவளிருந்த ஸோபாவை நோக்கி நடந்து அவளுக்கு அருகில் நெருங்கினார். அந்த மடந்தை முன்னிலும் அதிகரித்த மகிழ்ச்சியும், மனவெழுச்சியும் கொண்டு அவரை நோக்கி நன்றாகப் புன்னகை செய்தவளாய் சடக் கென்று ஸோபாவைவிட்டு எழுந்து சற்று விலகிநின்று நாணிக்குனிந்து, 'மகாராஜா நிற்கக் கூடாது. முதலில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்' என்று அந்தரங்கமான அன்போடு உபசரிக்க, அவளது கனிமொழியைக் கேட்டு ஆனந்தபரவசமடைந்த இளவரசர் அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் உல்லாலமாக அமர்ந்து