பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.0 பூர்ணசந்திரோதயம்-1 இருக்கிறது. புத்திசாலி ஸ்திரீகளாக இருப்பவர்கள் தங்களுடைய புருஷரிடத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்றால், புருஷர்களுக்கு அருகில் அதிகமாக நெருங்காமல், அவர்களுக்கு ஆகவேண்டிய காரியங்களையெல்லாம் செய்து, அவர்களது மனம் ஆநந்த பரவசமடையும் படி நடந்து கொள்ளுவார்கள். புருஷர்களால் தங்களுக்கு ஆகவேண்டிய காரியங்களை யெல்லாம் தூரத்திலிருந்தபடியே பெற்றுக்கொண்டுதான், பிறகு சமீபத்தில் நெருங்குவார்கள். மூடப் பெண்பிள்ளைகள் கூப்பிடச் செய்யாமல், புருஷர்களிடத்தில் அதிகமாக நெருங்கிப் பழகித் தங்களது மதிப்பைக் குலைத்துக் கொண்டு தங்களது சரீரத்தை மிகவும் கேவலமாக அவர்கள் வசத்தில் ஒப்புவித்து, கடைசியில் அவர்கள் வெறுத்து விலகும்படி செய்து கொள்ளுவார்கள். ஆகையால், ஸ்திரீகள் புருஷர்கள் சொல்லும் வேறு எதையும் அதிக துரிதத்தில் செய்யலாம்; சமீபத்தில் நெருங்கும் விஷயத்தை மாத்திரம் அவர்கள் அவ்வளவு சாதாரணமாக நினைத்தவுடனே செய்வது தனக்குத்தானே தீம்பு தேடிக்கொள்வது போலாகும். அந்தக் காரணத்தைக் கருதியும் நான் இப்போது தூரத்தில் நிற்க வேண்டியிருக்கிறது. இதைப் பற்றித் தாங்கள் ஆயாசப்படக்கூடாது. கிணற்றுநீரை வெள்ளங் கொண்டுபோகப் போகிறதில்லை. மகாராஜாவின் தரிசனமும் பழக்கமும் பிரியமும் அபிமானமும் எப்போது ஏற்படுமென்று நான் இதுவரையில் தவம் புரிந்து வந்தவளாயிற்றே. அப்படியிருக்க பருத்தி துணியாகவே காய்ப்பது போலத் தாங்களே என்மேல் பிரியப்பட்டு அழைக்கும்போது, நான் எப்படியும் வராமல் இருக்கப் போகிறதில்லை. நானோ பார்சீ ஜாதியைச் சேர்ந்த பெண். என்னுடைய சொந்த ஊர் பம்பாய். நானும் என்னுடையதாய்தகப்பன்மார்களும், இன்னம் சிலரும் ராமேஸ்வரம் வரையில் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தோம். என்னுடைய தகப்பனாருக்குக் கோடிக்கணக்கில் பொருளிருக்கிறது. அவர் தக்க மகாராஜா யாருக்காகிலும்