பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - பூர்ணசந்திரோதயம்-1 செய்தியைக் கேட்க, அளவிறந்த கலக்கமும், அநுதாபமும் அடைந்தவராய்ச்சிறிதுநேரம் வாயைத் திறந்து பேசமாட்டாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தபின், தாங்கள் சொல்லுவது எவரும் என்றைக்கும் கேளாத ஆச்சரியமாக இருக்கிறதே! அவ்வளவு பிரமாதமாக தங்களிடத்தில் அவள் பிரேமை வைத்திருப்பதாகச் சொல்லி, எவ்வளவோ பாடுபட்டுத் தங்களுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொண்டவள் அப்படி மறைந்து போகவேண்டிய காரணம் இன்னதென்பது கொஞ்சமும் விளங்கவில்லையே! அப்படிச் செய்ததில் அவளுடைய அந்தரங்கமான கருத்து என்னவாக இருக்கும் என்பதே யூகிக்க முடியாததாக இருக்கிறதே! அவள் தங்களிடத்தில் நடந்து கொண்டவரையில் அவளிடத்தி நாம் எவ்வித சம்சயமும் கொள்ள இடமே இல்லாதிருக்கிறதே! ஒருவேளை இந்தத் திருடர்கள் நம்மைக் கொள்ளையடித்ததோடு, கடைசியில் அவளையும் கொள்ளையடித்து அவளுக்கு ஏதேனும் தீங்கு செய்துவிட்டு ஒடிப்போயிருப் பார்களோ நமக்கு இன்று நடந்த சம்பவம் முழுதும் சொப்பனத்தில் கண்டகாட்சி போல இருக்கிறதேயன்றி வேறல்ல. ஆனால் இதில் ஒரு தாரதம்மியம் பார்த் தீர்களா? உங்களுக்கு நல்ல முதல் தரமான பார்சீ ஜாதிப்பெண்ணின் தரிசனம் கிடைத்தது. அவளுடைய சிநேகமும் அன்னியோன்யமான பழக்கமும் ஏற்படா விட்டாலும் அவளைப் பார்ப்பதும், அவள் உங்களோடு பேசுவதுமான எவருக்கும் கிடைக்காத இன்பமாவது உங்களுக்குக் கிடைத்ததே; அது எவ்வளவு பெரிய லாபம் பார்த் தீர்களா? எனக்கென்ன கிடைத்தது? என் மேலிருந்த நகைகளும் பணமும் போனதன்றி ரகசியமான காகிதங்கள் எல்லாம் அவர்களுடைய வசத்தி லகப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. எங்கே போனாலும் அவரவர்களுடைய அதிர்ஷ்ட மும் கூடவே தொடர்ந்து வருகிறது பார்த்தீர்களா?' என்றார். இளவரசர் புன்னகை செய்தவராய், "அது இருக்கட்டும்; அவள் எப்படித்தான் மறைந்துபோயிருப்பாள் என்பது