பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 137 செய்யத்தடையில்லை. தங்களுக்கு எப்படி இந்தப் பார்சீஜாதிப் பெண்ணை விட மனசில்லையோ, அதுபோல, எனக்கு அந்தப் பூர்ணசந்திரோயத்தைவிட மனமேயில்லை. ஆகையால், நான் இன்றுமுதல் என்னுடைய முழு கவனத்தையும் இந்த விஷயத்தில் செலுத்தி, தக்கமுயற்சி செய்து, இவளைத் தாங்கள் அடையும்படி செய்கிறேன். தாங்கள் தங்களுடைய கவனத்தை யெல்லாம் செலுத்தி முயற்சி செய்து பூர்ணசந்திரோதயத்தை ஜெயித்து எனக்குக் கொடுத்து விடுங்கள். இரண்டு பேரையும் நீங்களே அடையப் பிரியப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதுவும் தவிர, பூர்ணசந்திரோதயத்தின் விஷயத்தில் நாங்கள் பகீரதப் பிரயத்தனம் செய்வதாக வைத்துக் கொண்டாலும், தாங்கள் சொற்ப பிரயாசை எடுத்துக்கொண்டால்கூட, வெற்றி தங்களுக்குத்தான் ஏற்படும். அப்படியிருக்க, நான் அந்த விஷயத்தில் சுத்தமாக முயற்சியே செய்யாமல் சும்மா இருந்துவிட்டால், எனக்கு ஜெயம் கிடைக்குமென்று நான் கனவில் கூட நினைக்கமுடியாது. அப்படியானால், இந்தப் பந்தயத்தில் நான் சேர்ந்திருப்பதற்கும் சேராமலிருப்பதற்கும் வித்தியாசமே இல்லை. ஆகையால், அந்த விஷயத்தில் தாங்கள் பிரயாசைபட்டுக் காரியத்தை எனக்கு அனுகூலப்படுத்தி வையுங்கள். நான் என்னாலான வரையில் முயன்று இதை முடித்து வைக்கிறேன்' என்றார். அதைக்கேட்ட இளவரசர்சிறிதுநேரம் யோசனை செய்து, "நீர் சொல்லும் சங்கதி நியாயமாகத்தான் இருக்கிறது. உம்முடைய ஏற்பாட்டை நான் ஒப்புக்கொள்ளவும் தடையில்லை. எனக்கு இந்தப் பார்சீ ஜாதிப் பெண் கிடைப்பதாக இருந்தால், நான் அந்தப் பூர்ணசந்திரோதயத்தின் மேல் கொண்ட ஆசையை விலக்கிவிடவும் சம்மதம்தான். ஆனால் அவளுடைய மனசை என்மேல் திருப்புவதற்கு நான் முயற்சிக்காமல் வேண்டுமானால் சும்மா இருக்கலாம்; அவளுடைய மனசை உம்மீது எப்படித் திருப்புவதென்பது எனக்குத் தெரியவில்லையே! அவள் பணத்துக்காகக் காதலிக்கும் தாசியாக இருந்தால், நான்