பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 139 அவர்கள் செய்த தந்திரத்தைப் பார்த்தால், அவர்கள் யார் என்பதை நாம் எளிதில் கண்டுபிடிக்க இடங்கொடுக்காமல் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு அவர்கள் நடந்து கொள்ளுவார்கள் என்பதைப்பற்றிக் கொஞ்சமும் சந்தேக மில்லை. அப்படியிருக்க, மகா பூடகமாக இருக்கும் இந்த விஷயத்தில் நீர் என்ன விதமான முயற்சி செய்யப் போகிறீர்?" என்றார். ஜெமீந்தார் இளவரசரைப் பார்த்துப் புன்னகை செய்து, "புதன்கிழமை தினம் எங்கேயும் வெளியில் போகாமல் நான் என்னுடைய ஜாகையிலேயே இருந்தால், என்னுடைய தினசரி டைரிப் புஸ்தகத்தைக் கொண்டு போவதாக, இந்தத் திருடன் சொல்லியிருக்கிறான். மிகவும் தந்திரசாலியான ரகசியப் போலீஸ்காரன் ஒருவனை அமர்த்தி அவனை இந்தத் திருடனுக்குத் தெரியாமல் வெளியில் வைத்திருக்கப் போகிறேன். இந்தத் திருடன் வந்து பணத்தை வாங்கிக்கொண்டு போகும் போது, அந்தப் போலீஸ் காரனும், இவனுக்குத் தெரியாமல் தொடர்ந்துபோய், திருடனுடைய ஜாகையைக் கண்டுபிடிக்கும் படி செய்யப்போகிறேன். அதோடு என்னிடத்திற்கு வரும் திருடனுக்கும் ஏராளமான பணம் கொடுத்து இவன் மூலமாகவும் உண்மையைக் கிரகிக்கப் போகிறேன். இந்த இரண்டு வழியிலும் முயன்று எப்படியாகிலும் தேடிப்பிடித்து அவளுடைய இருப்பிடத்தைக் கண்டு அவளைச் சரிப்படுத்தி தங்களுடைய வசத்தில் நான் ஒப்புவிப்பேன் என்பதைத் தாங்கள் நிச்சயமாக நம்பலாம். பூர்ண சந்திரோதயம் எனக்குக் கிடைக்கப் போகிறாள் என்ற உறுதி ஏற்பட்டால், அந்த உற்சாகத்தில் நான்மலையைக் கூடப் புரட்டி விடுவேன். அவள் எனக்குக் கிடைக்கமாட்டாள் என்ற எண்ணம் என் மனசில் வருத்திக்கொண்டே இருக்க, நான் இந்தப் புதிய விஷயத்தில் இறங்குவேனானால், அவ்வளவு ஊக்கம் ஏற்படாது' என்றார்.