பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 159 வேண்டும். அவ்வளவுதான் இப்போது நீங்கள் செய்ய வேண்டிய காரியம். வேறே செய்ய வேண்டிய காரியத்தை நான் பின்னால் தெரிவிக்கிறேன். பஞ்சண்ணா: அப்படியே செய்யக் காத்திருக்கிறேன். அவள் எத்தனை தரம் இருமுகிறாள்; எத்தனை தரம் தும் முகிறாள் என்பதைக் கூட விடாமல் நான் தங்களுக்குத் தெரிவித்து விடுகிறேன். போதுமா? க. மிட்டாதார்: பேஷ் பேஷ்! அவ்வளவு கவனமாகவும் நுட்பமாகவுந்தான் நீங்கள் பார்த்திருக்கவேண்டும். அவளிடத்தில் வரும் மனிதர் இன்னாரென்று உனக்குத் தெரியாதிருந்தால், அவர் எப்படி இருப்பாரென்ற அடையாளங்களை யெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொள். அவர்கள் எப்போது வருகிறார்கள், எவ்வளவு நேரம் உள்ளே இருக்கிறார்கள், வெளியில் போகும்போது சந்தோஷமாகப் போகிறார்களா, ஏமாறிப்போய் விசனத்தோடு போகிறார்களா என்பவை போன்ற சகலமான விவரங்களையும் நீங்கள் அறிந்து எனக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். பஞ் சண்ணா:- அப்படியே! அப்படியே! தாங்களே இவ்விடத்தில் இருந்தால், என்னென்ன விஷயங்களைக் கண்டு அறிந்து கொள்வீர்களோ, அதைவிட அதிகமாகத் தாங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்கிறேன். ராமன் ஒருவனே இந்த விஷயத்தை மகா திறமையாகச் செய்து முடிக்கக் கூடியவன். அவனை இங்கேயே வைத்துவிடுகிறேன். இன்னமும் அநேகம் ஆள்களையும் வைத்து இங்கே இருந்து புறப்பட்டுப் போகும் ஒவ்வொரு மனிதரையும் தொடர்ந்து சென்று எவ்வளவு சங்கதிகள் தெரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் தெரிந்துகொள்ளச் செய்கிறேன். அவளே நேரில் எங்கேயாவது போனால், அப்போது ராமனே அவளுக்குப் பின்னால் போகும் படி செய்கிறேன். தாங்கள் இந்த விஷயத்தைப்பற்றி இனிக்