பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பூர்ணசந்திரோதயம்-1 உடனே பூர்ணசந்திரோதயம் குறும்பாகப் புன்னகை செய்து 'நீங்கள் இப்பேர்ப்பட்ட பொய் யான முகாந்திரத்தைச் சொல்லிக் கொண்டு இங்கே வந்தால், அந்த மாதிரியாகத்தான் சொல்லும்படியாக இருக்கும். அதைப்பற்றி ஏன் சந்தேகப்படு கிறீர்கள்? உங்களுக்குச் சேரவேண்டிய வீட்டு வாடகை அந்தந்த மாசம் முதல் தேதி உங்களுடைய வீட்டைத் தேடி வந்துவிடுகிறது. அதைத் தவிர, என்னிடத்தில் உங்களுக்கு இந்தவீடு சம்பந்தமாக வேறே ஏதாவது காரியம் ஆக வேண்டுமானால், கடிதத்தின் மூலமாக அதை எழுதி அனுப்பினால், அதற்குத் தகுந்தபடி நான் நடந்து கொள்ளுகிறேன். நீங்கள் நேரில் இங்கே வந்து என்னிடத்தில் இனிப்பேச வேண்டும் என்ற எண்ணத்தை இன்றோடு முடிவாக விட்டுவிடுங்கள். எனக்கு நேரமாகிறது. நீங்கள் வந்த காரியம் இவ்வளவுதானே? ' என்று கூறிய வண்ணம் அவ்விடத்தை விட்டு அப்பால் போக எண்ணுகிறவள் போல எழுந்தாள். அதைக் கண்ட சேரங்குளம் இனாம்தார் அதற்குமேல் எதையும் சொல்ல அறியாமல் குன்றிப்போய் இரண்டொரு நிமிஷநேரம் நின்றபின், 'சரி; பிறகு உன்னுடைய தயவு. நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன்' என்று கீழே குனிந்தபடி கூறிவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்க்காமல் அப்படியே நடந்து அவ்விடத்தை விட்டு வெளியில் சென்றார். சென்றவர் சகிக்க இயலாத வெட்கமும், அவமானமும் விசனமும் கொண்டவராய், "ஐயோ!என்ன அழகு என்ன புத்தி தீrண்யம் இப்படிப்பட்ட காணக் கிடைக்காத மாணிக்கத்தைக் கண்ட என்னுடைய கண்கள் இனி வேறே பெண்களைக் காணுமா? இப்படிப்பட்ட மகா சிலாக்கியமான பெண்மயிலை நாடிய என் மனம் இனி வேறே ஸ்திரீகளை நாடுமா? இப்படிப்பட்ட தேவாமிருதத்தை உண்ணக் கருதிய மனிதன் இதைவிட்டு இனிக் கிடைக்கும் கேழ்வரகுக் கூழைக்