பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 175 குடிப்பது சாத்தியமாகுமா சே அடைந்தால் இவளைத்தான் அடைய வேண்டும். இல்லையானால், இனிமேல் சந்நியாசம் வாங்கிக்கொள்ள வேண்டும். இருக்கட்டும். நான் இவளை இவ்வளவோடு விட்டுவிடக்கூடாது. இன்னம் வேறே பலவகையில் தந்திரம் செய்து முயன்று பார்க்கிறேன்' என்று தமக்குள் சிந்தனை செய்தவண்ணம் அந்த மாளிகையின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தமது வண்டியண்டை போய் அதற்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார். வண்டிக்காரன் வண்டியை ஒட்டத் தொடங்கிய சமயத்தில், "அடேய் வண்டிக்காரா நிறுத்து, போகலாம்' என்று பலமாக யாரோ கூறிய குரலுண்டாயிற்று. நமது மல்லகஜெட்டியான பஞ்சண்ணாராவ் அடுத்த நிமிஷத்தில் அவ்விடத்திற்கு வந்து தனது தலையை வண்டிக்குள் நீட்டிக் கபடமாகப் புன்னகை செய்து, 'எஜமானைப் பார்த்து நிரம்ப காலமாகிறது. எல்லாம் செளக்கியந்தானே இந்த ஏழையின் மேல் எஜமானுக்குத் தயவில்லை. எஜமான் இந்த ஜெகன்மோகன விலாசத்திலா இருப்பது? மேன்மாடத்தில் வேறே யாரோ இருக்கிறார்களே? ' என்று பேசிக் கொண்டே போக, அதைக் கேட்ட இனாம்தார் அவனிடத்தில் பேச்சை வளர்க்க மனம் அற்றவராய் அவசரத்தைக் காட்டி, "ஒகோ! பஞ்சண்ணாராவா என்னப்பா முகம் வாட்டமாக இருக்கிறது? கஞ்சாவுக்கு இன்னமும் வழி ஏற்படவில்லை போலிருக்கிறது! அதற்காக ஏதாவது நாலனா எட்டணா வேண்டுமானால் தருகிறேன்' என்றார். பஞ்சண்ணாராவ் அவரது வார்த்தையைக் கேட்டு, ஒருவாறு ஆயாச மடைந்தவன் போலக் காண்பித்துக்கொண்டு, 'அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; எஜமானுடைய தயவு மாத்திரம் இருந்தால், அதுவே போதுமானது' என்றான். அப்போது சிறிது தூரத்திற்கு அப்பாலிருந்த ஒரு விளக்குக் கம்பத்தில் மறைந்தும் மறையாமலும்