பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 191 கொண்டுபோக, அவளும் மட்டுக் கடங்கா மகிழ்ச்சியும் வாஞ்சையும் கொண்டவளாய் அவரை வணங்கி உள்ளே வந்து அவரது ஸோபாவிற்குப் பக்கத்தில் பெண்பாலார் உட்காருவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் ஆசனத்தின் மீது உட்கார்ந்து கொண்டாள். கிழஜெமீந்தார் தமது லோபாவை அவளுக்கு அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கரைபுரண்ட அன்பும், ஆதரவும் கண்களின் வழியாக ஜ்வலிக்க அவளது விசனகரமான முகத்தைப் பார்த்துக் கலங்கி உருகினார். ஒருமனிதன் உலகத்திலுள்ள மற்ற மனித வகுப்பை வெறுத்து, சுயநலம் பாராட்டி, அறுத்த கைக்குச் சுண்ணாம்பு கொடுக்காத பரமலோபியாக இருந்தாலும், அவனால் வளர்க்கப்படும் நாய்க் குட்டியினிடத்திலாவது அவனுக்கு அளவிறந்த பிரியம் இருக்கும். அதுபோல, ஈவிரக்கம் இல்லாமல் கொள்ளை கொலை முதலியவற்றை நடத்தும் பரம சண்டாளனான கிராதகன்கூடதனது வைப்பாட்டியிடத்தில் தாசாது தாசனாக இருப்பான். வெடுவெடுப்பும் கடுகடுப்பும் பொறாமையும் அகங்காரமுமே நிறைந்தவளான ஒரு மலட்டுப் பெண்பிள்ளை உலகிலுள்ள மற்ற மனிதரையெல்லாம் வெறுத் தாலும், ஒரு பூனைக்குட்டியையாவது எடுத்து வளர்த்து அதை அன்பாக ஊட்டி வளர்த்து அதற்கு நகைகள் போட்டு அலங்கரித்து மகிழ்ச்சியடைவாள். கள்ளனுக்கும் கன்னக்கோல் சார்த்த ஒர் இடம் உண்டு என்பதுபோல, மனித இயற்கை என்னவெனில், ஒருவன் எவ்வளவு தான் கடின ஹிருதயம் உடையவனாக இருந்தாலும் அவன் தனது பிரியத்தை எவரிடத்திலாவது அல்லது எந்த வஸ்துவினிடத்திலாவது வைத் திருப்பான். அதுபோல, நமது மருங்காபுரி ஜெமீந் தாருக்குப் பெண்டுபிள்ளைகள் உறவினர் முதலிய எவருமில்லை. ஆகையால், அவர் நெடுங் காலமாக ஏகாங்கியாக இருந்து வந்தார். நல்ல அழகான யெளவன ஸ்திரீகளைக் கண்டால், அவரது மனதில் சந்தோஷமும், ஆனந்தமும் உண்டாகும். ஆனால், அந்த உணர்ச்சி நீடித்து