பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் -: 205 யும் வேண்டும்.ஆண் பிள்ளைகள் எப்படி இருந்தால் என்ன? அதைப்பற்றி ஒருவரும் குறை கூறமாட்டார்கள். தாங்கள் இன்னம் 50, 60 வருஷங்களுக்குக் குறையாமல், நல்ல திடகாத்திரத்தோடு இருப்பீர்கள் என்பது நிச்சயம்; என்னைப் போன்ற யெளவன ஸ்திரீகளை ஒருத்திபின் ஒருத்தியாக இன்னம் இரண்டுபேரைக் கட்டிக்கொண்டு ஆளும் திறமையும் ஆண்மையும் தங்களுக்கு இருக்கிறது. ஆனால், அவர்களுடைய உண்மையான நிலைமை அவர்களுக்கே தெரியாது. மற்றவர்களுக்குத்தான் தெரியும். ஆனால், என் விஷயத்தில் மாத்திரம் தாங்கள் ஒரு பெருத்த அநியாயம் செய்துவிட்டீர்கள். நான் தங்களிடத்தில் இருந்தாலாவது இப்போதும் தங்களிடத்திலேயே இருப்பேன். இளவரசருடைய பேச்சுக்கு இணங்கி தாங்கள் என்னை அவருக்குச் சேர்த்து வைத் தீர்கள். அவர் இதுவரையில் என்னை வைத்திருந்த எனக்கு வயசாகிவிட்டதென்று என்னை இப்போது அலட்சியம் செய்து புறக்கணித்துவிட்டார். எனக்கு அவர் ஏராளமான செல்வம் கொடுத்திருக்கிறார் என்பது உண்மைதான். அப்படி இருந்தாலும், அவர் என்னை விட்டுவிட்டது பிறர் கண்டு ஏளனமாகப் பேசுவதற்கு இடம் கொடுக்கிறது அல்லவா? நான் இன்னமும் யெளவனப் பெண்ணாகவே இருக்கிறேன் என்று நீங்கள் என்னைப் புகழுகிறீர்கள். இளவரசரோ நான் கிழவியாகி விட்டேன் என்று என்னைப் புறக்கணித்து விட்டார். எதை உண்மையென்று மதிக்கிறது?" என்று மிகவும் கொஞ்சலாகப் பேசினாள். அதைக் கேட்ட ஜெமீந்தார், 'இளவரசர் உன்னைப்பற்றி எவ்வளவு பிரியமாகவும் புகழ்ச்சியாகவும் மதிப்பாகவும் பேசுகிறார் தெரியுமா? அவருக்கு உன் மேல் இருந்த பிரியம் எல்லாம் போய்விட்டது என்று நினைக்கவே நினைக்காதே’ என்றார். அம் மணிபாயி புன்னகை செய்து, 'இருக்கலாம். இருந்தாலும் வெறும் பேச்சுப் பேசினால், வயிறு நிறைந்து