பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பூர்ணசந்திரோதயம்-1 வைத்திருப்பாளோ என்று நினைப்பது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவது போலாகும். அதன்பிறகு கலியாணராமன் வந்தான். சே! நான் அயோக்கியமான நடத்தை யுடையவன்! அதை அவன் கண்டிருக்கிறான் என்ற எண்ணத்தினால் நான் அவனை வெறுக்கிறேன். அவன் மேலான நடத்தையுள்ள பரமயோக்கியன் அல்லவா! அவன் திருடர்களோடு சேரக்கூடியவனே அல்ல. அப்படி அவன் கொண்டுவந்து வைத்திருந்தால், இந்த இன்னொரு தொட்டியில் இருந்த பிஸ் டலை எடுத்து எனக்கு எதிரில் வியப் போடு பார்த்துக் கொண்டிருக்காமல், ரகசியமாக வைத்துவிட்டு ஒன்றையும் அறியாதவன் போலல்லவா உட்கார்ந்திருப்பான். ஆகையால், அவன்மேலும் சந்தேகம் கொள்ள ஏதுவில்லை. அதன்பிறகு அம்மணிபாயி அல்லவா வந்தவள். இத்தனை வருஷகாலமாக இல்லாமல் அவள் இப்போதுதானா திருடர்களோடு சேர்ந்து கொள்ளப் போகிறாள். அவளுக்கு என்ன குறை அளவற்ற செல்வம் இருக்கிறது! அவள் இப்படிப்பட்ட இழிவில் ஒருநாளும் இறங்கக் கூடியவளே அல்ல. ஆகவே, இன்றைய தினம் இங்கே வந்த மூன்று பேரும் இந்தக் காரியத்தில் சம்பந்தப்படக் கூடியவர்களே அல்ல. அப்படியானால், என்றைக்கும் கேட்டறியாத அற்புத சம்பவமாக வல்லவா இருக்கிறது! பணத்தை வாங்கிக் கொள்ளாமல் தினசரி டைரியை என்னிடம் திருப்பிக் கொடுக்க அந்தத் திருடன் இந்த புதன்கிழமையை ஏன் குறிக்க வேண்டும்? இதை அவன் சுலபமாகத் தபாலில் அனுப்பி இருக்கலாமே! என்னவோ இது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!” என்று கிழவர் எண்ணமிட்டிருந்த சமயத்தில், கோவிந்தன் பிச்சைக்கார வேஷம் தரித்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்துக்கொண்டு அங்கே வந்து சேர்ந்தான்.