பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பூர்ணசந்திரோதயம்-1 இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும் நம்முடைய அத்தையின் புருஷருக்கும் இவருக்கும் இருந்த பழைய நட்பைக் கருதி, நிராதரவாக இருக்கும் நம்மைக் காப்பாற்றும் படியான தருமத்தை அவர் ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நமக்கு அவர்கள் கட்டாயமாக உதவி செய்தே தீரவேண்டும் என்ற ஒர் உரிமை எதுவும் நமக்கு இல்லை. ஆகையால், இதுவரையில் அவர்கள் நமக்குச் செய்துள்ள கோடாதுகோடி நன்மைகளைக் கருதியும், இனியும் நமக்கு அவர்களைத்தவிர வேறே புகலிடம் இல்லை என்பதைக் கருதியும், நான் அவர்களுடைய மனம் கோணாதபடி நடந்து கொள்வது அவசியமாதலால், இன்னம் கொஞ்சகாலம் நான் இங்கே இருந்துவிட்டு வருவது தள்ளமுடியாத காரியமாக இருக்கிறது. நம்முடைய அத்தையை ஜாக்கிரதையாகவும் அன்பாகவும் காப்பாற்றி போஷித்து வரும் படி நான் உனக்கு எழுதுவது அவசியம். ஏனென்றால், அந்த விஷயத்தை எப்போதும் கவனித்து அதற்காகத் தன்னுடைய திரேகத்தை அர்ப்பணம் செய்து வருகிற நற்குணவதியான உனக்கு இந்த விஷயத்தில் நான் சொல்லிக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் நான் பிரிந்து போனதனால், நீதனியாக இருப்பதைப் பற்றி அதிக விசனத்தில் ஆழ்ந்து அதனால், நீ உன்னுடைய தேக செளகரியங் களைச் செய்துகொள்ளவும், அத்தைக்குத் தேவையான வைகளைச் செய்யவும் மறந்துபோய் விடப்போகிறாயே என்ற ஒரு கவலை என் மனசில் தோன்றி வதைக்கிறது. ஆகையால், நீ என்னை நினைத்து நினைத்து அதிகமாகக் கவலையுறாமல், வீட்டு விஷயங்களை யெல்லாம் வழக்கம் போல கவனித்து, உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும் படி நான் உன்னைப் பன்முறையும் வேண்டிக் கொள்ளுகிறேன். அவர்கள் இப்போது மேற்கு ராஜவீதி, 20வது இலக்கமுள்ள