பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பூர்ணசந்திரோதயம்-1 கள்கடையைக் கடந்து அப்பால் சென்றாள். அப்போது வழக்கப்படி கூச்சலும் பாட்டும், கூத்துமாகவே ஜனங்கள் உட்புறத்தில் இருந்தனர். ஆனால் வெளிப் புறத்தில் ஒரு சாணாத்தி மாத்திரம் உட்கார்ந்து தனது மகளுக்குப் பேன் பார்த்துக்கொண்டிருந்தபடி உட்புறத்தில் இருந்த ஒருவன் கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு மறுமொழி சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் என்ன பேசினாள் என்பது ஷண்முகவடிவின் காதிற்கு எட்டவில்லை. தான் தனது வீட்டிற்குச் சீக்கிரமாகப் போக வேண்டும் என்ற ஆவலினால் தூண்டப்பட்டவளாய், ஷண்முகவடிவு தனது முழுக் கவனத்தையும், வீட்டிலிருந்த நீலலோசனி யம்மாளின் மீது வைத்தவளாய் நடந்து கொண்டிருந்தாள். அவ்வாறு அந்த மடந்தை கள்கடைக்கு அப்பால் அரைக்கால் மைல் தூரம் போன சமயத்தில், அவளுக்குப் பின்னால் ரஸ்தாவில் யாரோ மனிதர்கள் பேசிய குரலைக் கேட்ட அந்தப் பெண்மணி திடுக் கிட்டு அச்சங் கொண்டு திரும்பிப்பார்க்க, நாலைந்து முரட்டு மனிதர்கள் குடிவெறி கொண்டு மயங்கி ஆடி விழுந்தவர்களாய், அதிக விசையாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அவள் திரும்பிப் பார்த்த போது, சுமார் 25கஜ தூரத்தில் வந்துகொண்டிருந்த அந்தக் குடியர்கள் அவளை நோக்கிக் குழறிக் குழறிப்பேசி, 'ஆர் அங்கே போறது? நில்லு அப்பிடியே; போகாதே' என்று அதட்டிக் கூறி, நிற்கும்படி கையமர்த்திய வண்ணம், அவளை நோக்கி விரைவாக நடந்துவர, அந்தமெல்லியலாள் வேடர்களைக் கண்ட மான்போல மருண்டு கலங்கித் திகைத்து நடுநடுங்கி வியர்த்து விருவிருத்து மெய்மறந்து அப்படியே நின்றுவிட்டாள். அந்தக் குடியர்கள் தனக்கு எவ்விதமான தீங்கு செய்வார்களோ என்ற திகில் அவளது மனதில் பொங்கி எழுந்தது. தன்னிடத்திலிருந்த பணம் முதலிய பொருட்களை அபகரிப்பதற்காக அவர்கள் வருகிறார்களோ, அல்லது, தேக சம்பந்தமான பொல் லாங் கையோ, இழிவையோ செய்ய