பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பூர்ணசந்திரோதயம்-1 இதைத்தெரிவித்து வைத்தால், அவர் அவர்களைக் கடுமையாகத் தண்டித்து, இனி அவர்களால் உனக்கு எவ்விதமான பொல் லாங்கும் நேராத வழியைத் தேடுவார். அதோடு உன்னிடத்திலிருந்து அபகரிக்கப்பட்ட பொருளும் வந்து சேரும். இப்போது நீலலோசனி அம்மாளைக் கவனிப்பதற்காக நீ அவசரமாக உன்னுடைய ஜாகைக்குப் போகவேண்டு மாதலால் பெரிய பண்ணைப் பிள்ளையிடத்தில் நாளைக்குக் காலையில், நாம் சொல்லிக் கொள்ளலாம் என்று நீ ஒரு வேளை நினைக்கலாம். உங்களுடைய ஜாகை இன்னம் அரைமைல் தூரத்தில் இருக்கிறது. நீயும் நானும் வேறே துணையில்லாமல் தனியாக அவ்வளவு தூரம் போவதும் அபாயகரமான விஷயம். எப்படி என்றால், இப்போது இந்த ஆள்கள், நான் செய்த பெருத்த கூக்குரலைக் கேட்டு, யாரோ பல மனிதர்கள் துணைக்கு வருகிறார்கள் என்று நினைத்துப் பயந்து ஒடியிருக்கிறார்கள். அவர்கள் ஒடினாலும் இப்போது எங்கேயாவது பக்கத்தில்தான் ஒளிந்திருந்து நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்; நான் ஒருவன்தான் துணைவந்திருக்கிறேன் என்பதையும், நீயும் நானும் தனியாகப் போகிறோம் என்பதையும் கண்டால், அவர்கள் மறுபடியும் திரும்பி வந்து ஏதாவது உபத்திரவம் செய்தாலும் செய்வார்கள். அவர்கள் எடுத்துக்கொண்டு போக என்னிடத்தில் யாதொரு பொருளும் இல்லையே என்று நீ சொல்லலாம். அவர்கள் முரடர்கள்; குடித்துவிட்டு மூர்க்கங் கொண்டு வந்திருப்பார்கள். நீயோ அழகும் யெளவனமும் நிறைந்தவளாய் இருக்கிறாய். அவர்கள் உன்னிடத்தில் ஏதேனும் துஷ்ட நினைவுகொண்டு திரும்பி வந்தாலும் வரலாம். இப்போது நான் வராவிட்டால், உனக்கு மானஹானியும், பிராணஹானியும் நேர்ந்திருக்கும் என்று நீயே சொன்னாய். அதிலிருந்து அவர்கள் அப்படிப்பட்ட சந்தேகாஸ்பதமான கெட்ட செய்கை ஏதேனும் செய்ய யத்தனித்திருக்க வேண்டுமென்பது தெரிகிறது. இப்போது நீயும் நானும் தனியாகப் போகிறோமென்பது