பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 257 மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. ஆகவே, அவள் சொப்பன அவஸ்தையில் இருப்பவள் போலச் செயலற்று அயர்ந்து அப்படியே நின்று அங்கே நடந்த சம்பாஷணையைக் கவனிக்கலானாள். அவ்வாறு உட்புறத்தில் ஜன்னலின் பக்கமாக ஷண்முகவடிவு வந்து நின்று கவனிக்கிறாள் என்பதைப் பற்றி எள்ளளவும் சந்தேகியாமலிருந்த பன்டாரமும் மற்றவர்களும் தங்களது சம்பாஷணையை நடத்தலாயினர். அப்போது பண்டாரம் அவர்களைப் பார்த்து, 'நான் இதற்குமுன் ஒருதரம் இவளுடைய அக்காளைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவள் வண்டியில் எங்கேயோ போய்க் கொண்டிருந்தாள். ஆகையால், அவளோடு பேசவாவது, அவள் யாரென்பதை அறிந்து கொள்ளவாவது கூடாமல் போய்விட்டது. அவளுடைய அற்புதமான அழகைக் கண்ட நிமிஷம் முதல் இதுவரையில் என்னுடைய மனம் கலங்கிப் போய் அப்படியே தாமரை இலைத் தன்னிர்த் துளிபோலத்தவித்துக்கொண்டிருந்தது. அவளுடைய அழகு என் மனசை அடியோடு கெடுத்து என்னை வேஷதாரிப் பண்டார மாக்கிவிட்டது. அவள் எங்கே இருப்பவள் என்பதைப் பற்றி நானும் என்னாலான வரையில் விசாரித்துப் பார்த்துவிட்டேன். ஒரு விவரமும் தெரியாமல் இருந்தது. ஆகையால், ஊமையன் கண்ட கனவு போல, நான் இந்த விஷயத்தை யாரிடத்திலும் வெளியிட மாட்டாமல் தவித்திருந்தேன். தற் செயலாக இன்றையதினம் மத்தியானம் இவளை நான் செட்டியாருடைய பாங்கியில் கண்டேன். இவளும் இவளுடைய அக்காளும் ஒரே மாதிரியான அழகும் வடிவமும் உடையவராக இருப்பதால், இவளை நான் முதலில், இவளுடைய அக்காள் என்றே நினைத்து, நெடுநாளாக என் மனசை வாட்டிக்கொண்டிருந்த பெண் தெய்வம் கடைசியில் தானாக வந்து காட்சி கொடுத்தது என்று நினைத்துப் பரம சந்தோஷம் அடைந்தேன். இவளுடைய அக்காள் தஞ்சாவூருக்குப் போயிருக்கிறாள் என்றும், இவள் பூ.ச.1-48