பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பூர்ணசந்திரோதயம்- i கள் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தவளாய் அவள் அவர்கள் பேசியதை உற்றுக் கவனித்தாள். கபட சந்நியாசி கூறிய சொற்களைக் கேட்டிருந்த முரட்டு மனிதருள் ஒருவன் வணக்கமாக அவரைப் பார்த்து, "நீங்கள் கள்கடையில் உட்கார்ந்துகொண்டு எங்களை அனுப்பி, இவளை மிரட்டும்படி செய்தீர்கள் என்பதைப்பற்றி இவள் கொஞ்சமும் சந்தேகமே கொள்ளவில்லை. மறுபடியும் நாங்கள்திரும்பிவந்து இவளுக்குத் தொந்தரவு செய்தாலும் செய்யலாம் என்றும் நீங்கள் இவளிடத்தில் சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள் என்பது கடைசி வரையில் இவளுக்குத் தெரியாதபடி நாம் தந்திரமாக இந்தக் காரியத்தை முடித்துக்கொள்வோம். நீங்கள் பெரிய பண்ணைப் பிள்ளையை அழைத்துக் கொண்டு சீக்கிரமாகத் திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டு வந்தீர்கள். நீங்கள் வந்து இப்போது சுமார் ஒரு நாழிகை நேரம் ஆகியிருக்கலாம். நீங்கள் இப்போது ஒரு காரியம் செய்யுங்கள். உடனே நீங்கள் முன் கட்டுக்குப் போய் கதவைத்தட்டித் திறந்துவிடச் செய்து, கதவை மறுபடியும் உட்புறத்தில் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள். பெரிய பண்ணைப் பிள்ளையின் ஜாகைக்கு நீங்கள் போனதாகவும், நாங்கள் வழி மறித்து உங்களைப் பிடித்து அடித்ததன்றி, பெரிய பண்ணைப் பிள்ளையிடத்தில் போய் இதைச் சொன்னால் கொன்று போட்டுவிடுவோம் என்று நாங்கள் பயமுறுத்திய தாகவும் சொல்லி விசனமாகப் பேசுங்கள். இவள் கலங்கிப் போய்த் தான் தன்னுடைய ஜாகைக்கு எப்படிப் போகிறது என்பதைப் பற்றி ஏதாவது கேட்பாள். அப்போது நீங்கள் கொஞ்சநேரம் பொறுத்து, மறுபடியும் ரகசியமாக இருட்டில் போய்ப் பெரிய பண்ணைப் பிள்ளையையும் ஆள்களையும் அழைத்து வந்து, இவளை உட்னே இவளுடைய ஜாகையில் கொண்டுபோய் விட வழி செய்வதாகச் சொல்லுங்கள். அதற்குள் நாங்கள் ஒட்டின்மேல் ஏறிவந்து உட்கார்ந்து