பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 261 கொண்டிருக்கிறோம். மறுபடியும் ரகசியமாக நீங்கள் பெரிய பன்னைப் பிள்ளையிடம் போவதாகச் சொல்வதைக் கேட்டவுடனே நாங்கள் முற்றத்தில் குதிக்கிறோம். நாங்கள் அவ்வளவுதூரம் சொல்லியனுப்பியும் நீ ரகசியமாகப்பெரிய பண்ணைப் பிள்ளையிடம் போய்ச் சொல்லவா போகிறாய் என்று நாங்கள் உங்களைப் பார்த்து அதட்டிக் கேட்டுக்கொண்டு, மிகுந்த கோபத்தோடும் மூர்க்கத்தோடும் வந்து உங்கள் மேல் பாய் கிறோம். ஒருவன் உங்களைப் பிடித்து அடிப்பதாகப் பாசாங்கு செய்யட்டும். இன்னொருவன் உடனே விளக்கை ஊதி அனைத்து விடட்டும். இருள் எங்கும் சூழ்ந்து கொள்ளும். உங்களைப் பிடித்திருக்கும் ஆள்உடனேவிலகிக் கொள்ளட்டும். நீங்கள் பெண்ணைப் பிடித்து அறைக்குள் இழுத்துக்கொண்டு போய் விடுங்கள். அவள் திமிறாமல் நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம். உங்களுடைய மனம் திருப்தி அடைந்தபிறகு நீங்கள் வெளியில் வந்து விடுங்கள். உடனே நாங்கள் உங்களைப் பிடித்துக் கம்பத்தோடு கட்டி வைத்துவிட்டு, கையில் அகப்பட்ட ஏதாவது சொத்துகளை எடுத்துக்கொண்டு ஒடிப் போய் விடுகிறோம். அதன்பிறகு நீங்கள் அந்தப்பெண்ணை அழைத்து மறுபடி விளக்கேற்றச் செய்து உங்களுடைய கட்டையும் அவிழ்த்துவிடச் செய்யுங்கள். திருடர்கள் உங்களை தாறுமாறாக அடித்துவிட்டதாகவும் சப்பை நகர்ந்து போய் விட்டதாகவும் சொல்லிப் பாசாங்கு செய்யுங்கள். பொழுது விடிந்தவுடனே நான் என்னுடைய மகனைத் தற்செயலாக வருகிறவன் போல இங்கே வரும்படி அனுப்பி வைக்கிறேன். அதன்மூலமாக நீங்கள் பெரிய பண்ணைப் பிள்ளைக்குச் செய்தி சொல்லி அனுப்புங்கள். அவர் வருவார்; வந்தவுட்னே, எல்லா விஷயங்களையும் சொல்லிவிடுங்கள்; ஆனால், ஆள்கள் இன்னாரென்று சரியானபடி அடையாளம் தெரியவில்லை என்றும், ஆளைப் பார்த்தால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்றும் பக்குவமாகச் சொல்லி, இவளை இவளுடைய ஜாகையில் கொண்டுபோய் விட்டுவிடும்படி