பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பூர்ணசந்திரோதயம்-1 நீங்கள் எடுத்துக் கொண்டதுபோக, மிகுதியிருக்கும் சேலைகள் சாமான்கள் முதலியவைகளை எங்கேயாவது நாளையதினம் விற்று, அந்தப் பணத்தையும், ஐந்து பங்காகப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சங்கதி. நான் வந்து அதிக நேரமாகிறது. பெண் சந்தேகப்படுவதற்கு முன்பு நான் போய் விடவேண்டும். நான் போப் உள் பக்கத்தில் தாளிட்டுக்கொள்ளுகிறேன். நீங்கள் இப்படியே ஒட்டின்மேல் ஏறிவந்து முற்றத்தின்மேல் ஆயத்தமாக உட்கார்ந்து கொண்டிருங்கள். ரஸ்தாவில் நிற்கப் போகிற மனிதன் முன்பக்கத்துக் கதவை வாசலில் தாளிட்டு வைத்துவிடட்டும். ஏனென்றால், நீங்கள் வந்து விளக்கை அனைத்தபிறகு, நானும் அவளும் தகராறு செய்கையில், அவள் தப்பித்துக்கொண்டு ஒருவேளை வாசற் கதவைத் திறந்து வெளியில் போனாலும் போய்விடுவாள். எழுந்திருங்கள் போகலாம் ' என்று கூறிய வண்ணம் திண்ணையை விட்டுக் கீழே இறங்கினார். உடனே அந்த முரட்டு மனிதன், சரி; நீங்கள் போய்க் கதவைத் தட்டுங்கள். அவள் வந்து கதவைத் திறப்பதற்குள், நாங்கள் இப்படியே ஒட்டின்மேல் ஏறி முன்கட்டு முற்றத்தில் வந்து ஆஜராக இருக்கிறோம். பயப்படாமல் போய்ப் பேசுங்கள். நாங்கள் வழிமறித்து அடித்து விட்டதாகப் பாசாங்கு பண்ணுங்கள்' என்று கூறிவிட்டு, அடே ஏறுங்கடா ஒட்டுலே' என்றான். உடனே பண்டாரம் அவ்விடத்தை விட்டு முன்பக்கத்து வாசலிற்கு வந்து சேர்ந்தார். முரடர்களுள் ஒருவன் நீங்கலாக மற்றவர்கள் சரசரவென்று ஒட்டின்மேல் ஏறி ஓசை செய்யாமல் முன் கட்டை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் சொன்ன சகலமான வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த மடமானான நமது ஷண்முகவடிவின் மன நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்வது எளிதேயன்றி விவரித்துச் சொல்வது மகா அசாத்தியமான காரியமாம். அதைப் பின்னால் விவரிப்போம். -