பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பூர்ணசந்திரோதயம்-1 கவனிக்கவே இல்லை. உடனே நான் சரேலென்று இதை மெதுவாகப் பிடித்துக் கொண்டேன். அவ்வளவுதான் விருத்தாந்தம்; நீங்கள் நினைக்கிறபடி, நான் குருவிக்காரனல்ல; இந்த அற்புதமான கிளியை விற்று, அதனால் நான் பணம் சம்பாதித்து வயிறு வளர்க்கவேண்டிய நிலைமையில் இருப்பவ னல்ல. எனக்கு சுவாமி கொடுத்த சொத்து கொஞ்சம் இருக்கிறது. இந்த அழகான சீனத்துக் கிளியின் அருமையை உணர்ந்து இதை அன்பாகவும் நாகரிகமாகவும் வைத்துக் காப்பாற்றக்கூடிய சிரேஷ்டமான மனிதருக்கு இதை நான் இனாமாகக் கொடுத்து விட வேண்டுமென்ற எண்ணத்தோடு வந்து கொண்டிருந்தேன். தற்செயலாக நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். இது மகா நுட்பம் பொருந்திய மிருதுவான ஜெந்துவாகையால், இதை முரடர் தொட்டு வளர்த்தால், இது கசங்கிப் போய்விடும். இதைவிட அதிக நுட்பமும் மிருதுவும் பொருந்திய கையை உடைய உங்களைப் பார்த்தவுடனே, இதை வளர்க்கக்கூடிய யோக்கியதை உங்களிடத்தில் பூர்ணமாக இருக்கிறது. என்று நினைத்து நான் இதை உங்களிடத்தில் காட்டினேன். நீங்கள் கிளிகளினிடத்தில் அத்யந்த வாத்சல்யமும் பிரேமையும் உள்ளவர்கள் என்பதும் எனக்கு ஏற்கெனவே நன்றாகத் தெரியும். ஆகையால், இதை நான் உங்களுக்கு இனாமாகக் கொடுக்க மனப்பூர்வமாக விரும்புகிறேன். இப்போதே கொடுத்து விடுகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு சிறிய நிபந்தனை இருக்கிறது. அதற்கு மாத்திரம் நீங்கள் இணங்க வேண்டும். இது மகா அருமையான கிளியாக இருக்கிறது. ஆகையால், இதனிடத்தில் எனக்கும் ஒருவிதப் பிரேமை ஏற்பட்டுவிட்டது. ஆகையால், தினம் ஒருதரம் நான் உங்களுடைய ஜாகைக்கு வந்து, இந்த சீனத்துக் கிளியை ஒரு தரம் பார்த்து விட்டுபோகும்படி நீங்கள் எனக்கு அநுமதி கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் வேறொன்றுமில்லை" என்று நயமாக மொழிந்தான். .