பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பூர்ணசந்திரோதயம்-1 சூரக்கோட்டைப் பாளையக்காரர் மிகுந்த வியப் போடு, 'என்ன ஆச்சரியம்! இந்த அற் பசங்கதியை நான் விவரித்துச் சொல்லவேண்டுமா? ஒரு யெளவனப் பெண்ணும் யெளவனப் புருஷனும் சிநேகமாக இருப்பதென்றால் தாலிகட்டுவது ஒன்று நீங்கலாக, மற்ற எல்லா நடவடிக்கைகளிலும் அவர்கள் புருஷன் பெண் ஜாதிபோல அன்னியோன்னியமாக இருப்பது என்று அர்த்தம். இது தெரியவில்லையா?' என்றான். பூர்ணசந்திரோதயம், 'சிநேகமென்ற சொல்லுக்கு அவ்வளவு ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதை நான் இப்போது உம்மிடத்தில் தான் கற்றுக்கொண்டேன். அதுபோகட்டும்; உம்மோடு பகையாக இருப்பதென்றால், அதன் வியாக்கியானம் என்ன? " என்றாள். ס) சூரக் கோட்டை பாளையக்காரர், 'நீ எளிதிலேயே என்னுடைய இஷ்டப்படி இணங்கி வராவிட்டால், பிறகு நான் அதற்குத் தகுந்த ஆட்களை வைத்து உன்னை எப்படியாவது பலவந்தப்படுத்திக் கண்காணாத இடத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து, உன்னை அடக்கி வசப்படுத்துவேன். அது முடியாவிட்டால், நீ வேறே யாரையாவது கலியாணம் செய்து கொள்ளவோ, அல்லது, ஆசைநாயகனாக வைத்துக் கொள்ளவோ நினைத்தால், நான் பலவகையில் முயற்சி செய்து அந்த மனிதன் உன் நடத்தையைப் பற்றி சந்தேகம் கொள்ளும் படி செய்துவிடுவேன். நீ என்னை வைத்துக் கொண்டிருப்பதாக, நான் ஊர்முழுதும் புரளி செய்வேன். இன்னம் ஆயிரம் ஆட்களை அமர்த்தி அதே மாதிரியான புரளியை இந்த ஊர் முழுதும் பரவச் செய்வேன். நீ எனக்கு எழுதியதுபோல அநேகம் காதல் கடிதங்களை நானே தயாரித்து அதைக் காட்டி, உன்னுடைய யோக்கியதையைக் குலைத்து விடுவேன். சண்டி புரண்டால் காடு கொள்ளாதென்று பழமொழி சொல்வதுண்டு. அதுபோல, நான் இடக்குப் பண்ண ஆரம்பித்தால் நீதலை கீழாகக் கரணம் போட்டாலும், உன்னை