பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 - - பூர்ணதந்திரோதயம்-1 சந்தேகம் வேண்டாம் ; இப்போதே நான் நேராக அந்த ஜெகன்மோகன விலாசத்துக்குப் போய்ப் பக்கத்தில் ஒளிந்திருந்து எல்லா ரகசியங்களையும் அறிந்து நாளைக்கு சாயுங்காலம் எஜமானுடைய ஜாகைக்கு வந்து எல்லா விஷயங்களையும் சொல்லுகிறேன். இதற்காக எஜமான் எனக்கு வெகுமதிகூடச் செய்யவேண்டுமா? அதெல்லாம் எதுவும் தேவையில்லை. எஜமானுடைய பூரணமான தயவு இந்த அடிமையின்மேல் இருந்தால், அதுவே போதுமானது. எனக்கு வேறே ஒன்றும் தேவையில்லை' என்று கூறினான். பாளையக்காரர், "சரி; நீ போய்க் காரியத்தைப் பார்; நாளைய தினம் சாயுங்காலம் தவறாமல் என்னுடைய ஜாகைக்கு வந்து சேர்; இப்போது நீ வெறுங் கையோடு போனால், உனக்கு வயிறில்லையா? இன்று ராத்திரி உனக்குப் பசியுண்டாகும் அல்லவா! நீ பட்டினியாக இருந்துகொண்டே என்னுடைய வேலையைச் செய்யும்படி சொல்வது தருமமாகுமாஇதோ என் கையில் இருக்கும் பணத்தையெல்லாம் தருகிறேன். வாங்கிக்கொண்டு போ' என்று கூறித் தமது இடுப்பிலிருந்த ஐந்து ரூபாய் பணத்தை எடுத்து அவனிடம் நீட்டி வற்புறுத்த அவன் மனமில்லாதவன் போல நடித்து, அதை வாங்கிக் கொண்டு அவரிடம் விடைபெற்று அவ்விடத்தை விட்டுப்பூர்ண சந்திரோதயம் சென்ற வழியிலேயே நடந்து போய்விட்டான். மறுநாளாகிய வியாழக்கிழமை வந்து சேர்ந்தது. அன்றைய தினம் காலையில் எழுந்தது முதல் பூர்ணசந்திரோதயத்தின் இடது கண்ணும் இடது மார்பும் துடித்துக்கொண்டே இருந்தன. அடிக்கடி காக்கை அவளுக்கருகில் வந்து கத்திக்கொண்டே இருந்தது. அவளது திருஷ்டியில் அநேக சுபசகுனங்கள் தென்பட்டுக் கொண்டிருந்தன. இன்ன காரணத்தினால் என்பது தெரியாமல் அவளது உள்ளம் பூரித்துப் பொங்கி ஆனந்தமாக நிறைந்து நின்றது. அவளது அற்புதமேனி பசத்து, அடிக்கடி மயிர்க் கூச்சலடைந்து கட்டிலடங்காமல் துடித்து நொடிக்கு