பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பூர்ணசந்திரோதயம்-1 கூசுகிறது. தாங்களும் இப்போது வந்தவுடனே முதலில் அதையே சொன்னிர்கள். ஆனால், இந்தப் பொய் இவ்வளவு தூரம் பரவியதனாலேதான் தாங்கள் என்னை ஒரு பொருட்டாக மதித்து இவ்வளவுதூரம் வந்தீர்கள். இல்லாவிட்டால், தாங்கள் என்னை நினைத்துக்கூட இருக்க மாட்டீர்கள். இன்று எனக்குக் கிடைத்த இந்த பாக்கியத்திலிருந்தே ராஜஸ்திரீயாக இருப்பதனால் ஏற்படும் மேம்பாடு எவ்வளவு என்பது நன்றாகத் தெரியவில்லையா' என்றாள். அதைக் கேட்ட அந்தப் பெருமாட்டி வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பேசத் தொடங்கி, 'வெகுஜனவாக்கு வேத வாக்குக்குச் சமமல்லவா! உங்களைப் பார்த்தவுடனே நீங்கள் ராஜஸ்திரீயாக இருப்பதற்குத் தகுந்த சகலமான லட்சணங்களும் உங்களிடத்தில் இருப்பதைக் கண்டு பொது ஜனங்கள் உங்களை உண்மையிலேயே அப்படி ஆக்கிவிட்டார்கள். அவர்களால் கொடுக்கப்படும் மேம்பாட்டை நீங்கள், வகித்துக் கொள்ள வேண்டுமேயன்றி, அதை விலக்குவது சரியல்ல. நீங்கள் இதுவரையில் ராஜஸ்திரீகளைப் பற்றிப் புகழ்ச்சியாகப் பேசியதிலிருந்து உங்களுக்கும் ராஜஸ்திரீஆக வேண்டுமென்ற ஒர் அவா இருப்பதும் தெரிகிறது' என்றாள். - பூர்ணசந்திரோதயம் மகிழ்ச்சியாக நகைத்து, "பிறப்பிலேயே ராஜவம்சத்தில் பிறந்து ராஜஸ்திரீ ஆகிறதா? அல்லது ஒருவர் பார்த்து ராஜஸ்திரீயாகச் செய்கிறதா?’ என்றாள். பெருமாட்டி, 'ஏன்! இரண்டு வகையிலும் ஆகலாம். இயற்கையிலேயே ராஜகுடும்பத்தில் பிறந்தும் ராஜஸ்திரீ ஆகலாம். சேர்க்கையினாலும் ராஜஸ்திரி யாகலாம். ராஜஸ்திரீ என்றால் அர்த்தமென்ன? ராஜனுக்குப் பிரியமான ஸ்திரீ என்பதுதானே. அபூர்வமானஅழகும், மற்ற சகலமானலட்சணங் களும் நிறைந்து மனமும் இருந்தால், ராஜனுக்குப் பிரியமான ஸ்திரீ ஆக எவ்வளவு நேரம் பிடிக்கும். ஆனால், உனக்கு அந்த விஷயத்தில் மனம் இருக்கிறதோ என்பதுதான் வெளிப்படை யாகத் தெரியவில்லை' என்றாள்.