பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 309 பூர்ணசந்திரோதயம் குதூகலமாக நகைத்து, 'சரி சரி: நம்முடைய சம்பாஷணை எதிலேயோ ஆரம்பித்து எதிலேயோ போய் முடிந்தது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், எனக்குப் பிரியமிருக்கும் பrத்தில் என்னை உடனே ராஜஸ்திரீ ஆக்கி விடுவீர்கள் போல இருக்கிறது. தங்களுக்குப் புத்திரரோ, அல்லது தம்பியோ இருந்து அவர் எந்த தேசத்திலாவது மகாராஜாவாக இருந்தால், தாங்கள் உடனே என்னைப் பற்றி அவரிடம் சிபாரிசு செய்து என்னை ராஜஸ்திரீ ஆக்கிவிடுவார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. ஆனால், எனக்கு மாத்திரம் விருப்பம் இருந்தால் அது போதுமா? அவருக்கும் பரஸ்பரம் என் மேல் விருப்பம் இருக்க வேண்டாமா? அவர் என்னிடத்தில் உண்மையான காதலும் பிரேமையும் செய்து கொள்ளா விட்டாலும் என்னையே அவர் பட்ட மகிஷியாக மதித்து, ராஜாங்க விஷயத்தில் என்னுடைய இஷடத்தையும் கலந்து எல்லா விஷயங்களையும் நடத்த வேண்டும். இத்தனை விஷயங்களும் ஒத்துக்கொள்வதாக இருந்தால், தாங்கள் கருதுகிறபடி நான் ராஜஸ்திரீ ஆக இணங்கலாம். அது இந்த ஜென்மத்தில் நிறைவேறக்கூடிய காரியமல்ல' என்றாள். பெருமாட்டி சந்தோஷத்தோடு நகைத்து, “ஏன் அம்மா! அது இந்த ஜென்மத்தில் நிறைவேறாது என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் இப்போது சொன்ன நிபந்தனைகளின்மேல், இதே தேசத்து மகாராஜா உங்களை ராஜஸ்திரீயாகச் செய்துகொள்ள நானே ஏற்பாடு செய்கிறேன். உங்களுக்குச் சம்மதமானால், சொல்லுங்கள். இன்றைய தினமே முடித்து வைக்கிறேன். கரும்பு தின்ன யாராவது கூலி கேட்பார்களா? ஒரு மகாராஜனுடைய பட்டமகிஷி ஆவதற்கு உங்களைவிட அதிக மேம்பாடுடைய ஸ்திரீ இந்த உலகத்தில் இருக்கப்போகிறாளா என்பதே சந்தேகம். உங்களை அடையும்படியான பாக்கியம் சாதாரணமாக எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதல்ல. இந்த ஊர் மகாராஜனானாலும் இதைவிடப் பெரிய ராஜ்யத்தின்