பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பூர்ணசந்திரோதயம்-1 சக்கரவர்த்தியானாலும், அல்லது, உங்களைப் படைத்த அந்த பிரம்ம தேவனானாலும், உங்களிடம் நெருங்கி ஒரு நொடி நேரம் பழகி உங்களுடைய குணாதிசயங்களை அறிவார் களானால், உங்களை அடைவதற்கு அவர்கள் எவ்வளவு கொடிய தவம் செய்யவும் இணங்குவதன்றி, அவர்களுடைய உடல், பொருள், ஆவி முதலிய எல்லாவற்றையும் கொடுத்துவிடவும் முந்துவர். உங்களிடத்திலுள்ள அபாரமான மகிமையும் யோக்கியதையும் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியாமல் இருப்பதால், நான் சொல்வது எல்லாம் உங்களுக்கு ஆச்சரியகரமாகவும் நம்பத் தகாததாகவும் இருக்கலாம். நான் பலபல பேசுவதைவிட ஒரே வார்த்தையில் உங்களுடைய சிறப்பு எவ்வளவு என்பதைச் சொல்லிவிடுகிறேன். இந்த உலகத்திலுள்ள மற்ற சாதாரண மனிதருள் எப்பேர்ப்பட்டவரும் உங்களைக் கையால் தொடுவதற்குக்கூட அருகமற்றவர்கள். நீங்கள் ஒரு தேசத்து மகாராஜனுடைய ஆசைநாயகியாக இருந்து, எல்லோருக்கும் தலைமை வகிக்கவே அருகமானவர்கள். ஆகையால், நீங்கள் லஜ்ஜைப் படாமல் உங்களுடைய மனசைவிட்டு என்னிடம் பேசுங்கள். நீங்கள் இவ்வளவு பெரிய பட்டணத்தில் எங்கேயோ ஒரு மூலையில் மறைந்து கொண்டிருந்தாலும் உங்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும் அபூர்வமான அழகைப் பற்றியும் பேசி ஆச்சரியம் அடையாத மனிதரே இல்லை. இந்த ஊர் மகாராஜாவுக்குக் கூட உங்களுடைய விவரங்கள் எல்லாம் எட்டி இருக்கிறது என்றால், இந்த ஊர்ஜனங்களுடைய இருதயகமலத்தில் நீங்கள் எவ்வளவு தூரம் புகுந்து விட்டீர்கள் என்பது நன்றாக விளங்கும். எத்தனையோ லக்ஷக்கணக்கில் ஜனங்கள் நிறைந்துள்ள இவ்வளவு பெரிய பட்டணத்தில் அழகில் ரதியை வெல்லக்கூடிய யெளவன ஸ்திரீகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுடைய பெயரும் கீர்த்தியும் இப்படிப் பரவியதே இல்லை. உங்களுடைய பெயரும் புகழும் இவ்வளவு