பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 313 நினைத்து இன்றைய காலைமுதல் என்மனம் பட்டபாடு இவ்வளவு அவ்வளவல்ல. என்னுடைய உடம்பும் இருக்கை கொள்ளாமல் ஒய்வின்றித் தவித்துக் கொண்டிருந்தது. அவர் வராமல் தாங்கள் வந்ததும் அநுகூலமானதுதான் என்றாள். அந்தப் பெருமாட்டி, 'ஆ என்ன ஆச்சரியம்! இன்று அவருடைய முறை என்பதுகூட உங்களுக்குத் தெரிந்திருக் கிறதே! அப்படியானால், அவர்கள் ரகசியமாக வைத்துள்ள பந்தயத்தின் விவரமெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! இதையெல்லாம் உங்களிடத்தில் சொன்னது யார்?' என்றாள். பூர்ணசந்திரோதயம், 'இந்தப் பக்கம் திங்கட்கிழமையி லிருந்து ஆரம்பமாகி நடந்து வருகிறது. திங்கட்கிழமை ஒரு மிட்டாதார் வந்தார். செவ்வாய்க்கிழமை ஒரு இனாம்தார் வந்தார். நேற்று பாளையக்காரர் வம் புலாம் சோலையில் என்னை வளைத்துக் கொண்டார். நேற்றுவரையில் எனக்கு இந்த ரகசியம் தெரியாதிருந்தது. நேற்றுதான் எல்லா விஷயங்க ளையும் அந்தப் பாளையக்காரர் வெளியிட்டார். அவர் இந்த ரகசியங்களை யெல்லாம் என்னிடம் சொல்லியாவது என்னுடைய பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று பார்த்தார். ஆனால், மற்றவர்களைப் போலவே அவரும் அவமானம் அடைந்து திரும்பிப் போய்ச் சேர்ந்தார். இன்றைக்கு இளவரசருடைய முறையென்று அவர்தான் சொன்னார். நாளைய தினம் யாரோ ஒரு கிழவருடைய முறையாம். மறுநாள் இன்னொருவர் வரப்போகிறாராம். இந்த மூன்று தினங்களும் எப்படிக் கழியுமோ என்று நான் நிரம் பவும் கவலை கொண்டிருக்கிறேன். இவர்கள் சாதாரணமாக என்னிடத்தில் வந்து இந்த விஷயத்தைப் பற்றிப் பேச நான் இடங்கொடுக்க மாட்டேன் என்று ஒவ்வொரு வரும் ஒவ்வொரு முகாந்திரத்தை வைத்துக்கொண்டு என்னிடம் வந்தார்கள் போலிருக்கிறது. நேற்று இந்தச் சதியாலோசனையைக்கேட்டவுடனே எனக்குப் பெருத்த