பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பூர்ணசந்திரோதயம்-1 கவலையுண்டாகிவிட்டது; இன்னம் பாக்கி இருக்கும் மூன்று பேரும் எந்த நிமிஷத்தில் எந்த முகாந்திரத்தை வைத்துக் கொண்டு என்னிடம் வருவார்களோ என்று நான் கவலை கொண்டு ராத்திரிப் பகல் எச்சரிப்பாக இருந்து வருகிறேன். இன்று இளவரசர் எப்படிப்பட்டதந்திரம் செய்யப் போகிறாரோ என்று யோசித்து இன்று காலை முதல் நான் அதே கவனமாக இருந்து வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறேன். இப்போது தாங்கள் வந்திருப்பது கூட இளவரசருடைய இன்றைய முறைக்கு சம்பந்தம் உள்ளதாக இருக்குமோ என்ற எண்ணந்தான் இப்போதும் என் மனசில் உண்டாகிறது . என்றாள். அந்தப் பெருமாட்டி மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்தவராகத் தோன்றி பூர்ணசந்திரோதயத்தை நோக்கி, “ஆகா! எல்லா ரகசியமும் இங்கே வந்து அற்றுப் போயிருக்கிறதே. இந்தப் பந்தய விஷயத்தை யாரும் பிறரிடத்தில் வெளியிடக் கூடாது என்ற கண்டிப்பான நிபந்தனை ஏற்படுத்தி அதை எல்லோரும் ஒப்புக்கொண்டி ருக்கிறார்கள். அப்படியிருக்க, இந்த சூரக் கோட்டைப் பாளையக்காரர் மாத்திரம் இப்படி நடந்துகொண்டது. அயோக்கியத்தனமாக இருக்கிறது. இந்த விஷயத்தை நான் போய் இளவரசரிடத்தில் தெரிவித்தால், அவரும், மற்ற நால்வரும் அந்தப் பாளையக்காரரை வெறுத்து அவருடைய சிநேகத்தையே விலக்கி அவரை இந்த ஊருக்கே வராமல் அடித்துவிடுவார்கள். தனக்குக் கிடைக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலினால், அவர் இதை வெளியிட்டு மற்றவருடைய ஏற்பாடுகளையும் கெடுத்திருக்கிறார் என்பது நிச்சயம். இருக்கட்டும்; நான் போனவுடனே இந்தச் சங்கதியை இளவரசரிடம் தெரிவித்து இதற்குத் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளச் செய்கிறேன்' என்றாள். அதைக்கேட்டபூர்ணசந்திரோதயம் வேடிக்கையாக நகைத்து