பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 - பூர்ணசந்திரோதயம்-1 ஆசைநாயகியாகி எவருடைய இடைஞ்சலும் இல்லாமல் மகாராஜாவின் அதிகாரங்களை யெல்லாம் செலுத்துவது பரம சிலாக்கியமான காரியந்தான். அதற்கு நான் இணங்குவதில், முதலில் அந்தக் கிழவர் என் விஷயத்தில் முயற்சி செய்யும் படியான மகாகேவலமான இழிவுக்கு நான் ஆளாகாமல் தப்பலாம். எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்க்க, சம்மதம் என்று சொல்வதைத் தவிர வேறே எந்த வழியும் எனக்குப் புலப்படவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம். நான் அந்த இளவரசரையும் பார்க்கவில்லை. அவரால் அனுப்பப்பட்டு வந்தவர்களான நீங்களும் இன்னும் எனக்குத் தரிசனம் கொடுக்காமல், அங்கியால் உங்களுடைய வடிவத்தை மறைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நான் எந்த மனிதரையும் நேரில் பார்க்கக் கொடுத்து வைக்காதிருக்கும் நிலைமையில், மற்ற அபாரமான வைபவங்களும் சம்பத்தும் எனக்குச் சித்திக்கும் என்று என் மனம் எளிதில் நம்பமாட்டேன் என்கிறது' என்றாள். - அதைக் கேட்ட அந்தப் பெருமாட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவளாய், 'அம்மா! நான் இங்கே வந்தவுடனேயே என்னுடைய அங்கியை விலக்கி வைத்துவிட்டே உங்களோடு பேசியிருப்பேன். ஆனால் உங்களுடைய மனப் போக்கு எப்படி இருக்குமோ என்றும், நீங்கள் எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்காமல் மற்ற மூன்று பேரையும் இகழ்ந்து அனுப்பியதுபோல என்னையும் செய்வீர்களோ என்றும் அஞ்சி, உங்களுடைய மனநிலைமை எங்களுக்கு அநுகூலமாக இருந்தால், அதன்பிறகு என்னுடைய அங்கியை விலக்க எண்ணியிருந்தேன். இப்போது நீங்கள் எங்களுடைய கருத்துக்கு இணங்கி வந்ததைக் காண நான் அடையும் சந்தோஷம் இவ்வளவு அவ்வளவென்று சொல்லத் தக்கதல்ல. நான் போய் இந்த சந்தோஷச்செய்தியை இளவரசரிடம் தெரிவித்தால், அவர் அப்படியே ஆனந்தக் கூத்தாடுவார்; யூத உடம்போடு ஒருவன்சுவர்க்க லோகம் புகுந்தால், எவ்விதமான