பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 323 பரம ஆனந்தம் அனுபவிப்பானோ, அவ்விதமாக அவர் மட்டுக்கடங்கா இன்பமும் களிப்பும் கொண்டு பூரித்து விம்மிதம் அடைவார். ஆகையால், நான் இனிமேலும் குறுக்கே இருந்து நீங்கள் இருவரும் அடையப்போகும் நிகரற்ற சாயுஜ்ய போகத்துக்கு இடையூறு செய்ய மனமில்லை. ஆகையால், நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். எல்லா விஷயங்களும் முடிந்த மாதிரியே நீங்கள் பாவிக்க வேண்டும். அவர் இனி உங்களைக் காணவரும் போது எவ்வித ஆட்சேபனை சமாதானங்களும் இருக்கவே கூடாது. மணவறையில் தன்னுடைய புதிய மணவாட்டியைக் காணப் போகும் புருஷன் எப்படிப்பட்ட வரவேற்பை எதிர் பார்ப்பானோ, அதே விதமான அவாவோடு அவர் இங்கே தோன்றுவார். நீங்கள் உடனே அவருடைய ஆலிங்கனத்துக்கு வந்து சேரவேண்டும். அதன்பிறகு அவராகவே உங்களுக்கு வேண்டிய சகலமான உறுதிகளையும் செய்து கொடுப்பார். நிபந்தனைகள் எல்லாம் உங்களுடைய வாயிலிருந்து வருவதே உங்களுடைய கண்ணியத்துக்குக் குறைவானது. நான் சொல்வது தெரிகிறதா? அப்படியே செய்வதாக ஒப்புக் கொள்ளுங்கள். நான் உடனே போய் அவரை அனுப்புகிறேன்' என்று உரிமையாக வற்புறுத்திக் கூறினாள். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் மிகுந்த சஞ்சலமும் தவிப்பும் அடைந்தவளாய், "சரி, அவர் இந்த ராஜ்யத்துக்கே மகாராஜா. அவருடைய திருவாக்குக்கு எதிர்வாக்கு சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது. அவருடைய பிரஜைகளுள் நான் ஒருத்தி. ஆகையால், நமக்கெல்லாம் தெய்வம், தாய் தந்தை, புருஷன் முதலிய சகலமும் அவர்தான். அப்படியிருக்க அவராகப் பார்த்து எனக்கு இப்படிப்பட்ட பெருமையை உண்டாக்கிக் கொடுக்க ஆவல் கொண்டு இவ்வளவு தூரம் பிரயாசைப் படும்போது அதற்கு மாறாக நான் நடப்பது தருமமாகாது. ஆகையால், அவருடைய மனம்போல நடந்து கொள்ள நான் ஆயத்தமாக இருக்கிறேன். தாங்கள்