பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - பூர்ணசந்திரோதயம்-1 ஒரு நொடியில் கீழே இறங்கிவிடுகிறேன். உடன்ே ; மெதுவாகக் கண்ணாடிக் கதவை மூடிவிட்டு, நூலேணியையும் மறைத்து வைத்துவிட்டு விளக்கைக் கொளுத்திக்கொண்டு போய்க் கதவைத் திறந்துவிடு' என்று மிகவும் பதைபதைப்பாகக் கூறினார். அப்போது, கீழே இருந்த வேலைக்காரர்கள் வேலைக்காரிகள் முதலிய எல்லோரும் விழித்துக்கொண்டு பேசிய குரல் மேலே கேட்டது. ஏதோ சாமான்கள் உருட்டப்படும் ஒசைகள் மேலே கேட்டன. அவற்றை உணர்ந்த அந்த வடிவழகி, "ஐயையோ எல்லாரும் விழித்துக் கொண்டார்களே! நீங்கள் கீழே இறங்கும்போது அங்கே இருக்கும்வேலைக்காரர்கள் உங்களை அவசியம் பிடித்துக்கொள்வார்கள். ஆகையால், நீங்கள் கீழே இறங்குவது சரியல்ல" என்று கூறி அந்த மகா அபாயகரமான நிலைமையில் என்னசெய்வதென்பதை உணராமல் தவிக்க, உடனே அந்த மனிதர், கண்ணே நேரமாகிவிட்டது. கதவை முன்னிலும் வலுவாக இடிக்கிறான். நான் இனிமேல் கீழே இறங்க நேரமில்லை. என்னை எங்கேயாகிலும் ஒளிய வைத்துவிடு. அவன் வெளியில் போகிறவரையில் நான் ஒசை செய்யாமல் ஒளிந்துகொண்டிருக்கிறேன்' என்றார். அதைக்கேட்ட யெளவனஸ்திரீ, 'ஆம். அப்படித்தான்செய்ய வேண்டும். இதோ பக்கத்தில் ஸ்நானம் செய்யும் அறை இருக்கிறது. அங்கே அடுப் பின்மேல் பெருத்த வெந்நீர் அண்டா வைத்து அடுப்போடு கட்டப்பட்டிருக்கிறது: அதற்குள் இறங்கி ஒளிந்து கொண்டிருங்கள். அவர் கடுமை யான நித்திரை செய்யும்போது மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் போய் விடுங்கள் என்றாள். அந்த ஏற்பாட்டிற்கு அவரும் இணங்க உடனே அவர்களிருவரும் ஸ்நான அறைக்குப் போயினர். அந்த மனிதர் வெந்நீர் அண்டாவிற்குள் இறங்கி மறைந்து கொண்டார்; அதன் மேலே மூடப்படும் ஒரு தட்டினால் அண்டாவின் வாய் உடனே மூடப்பட்டது.