பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 33 அந்த ஸ்திரீ அவரை நோக்கிப் பல்லைக்காட்டி நயமாகக் கொஞ்சி, 'இல்லை இல்லை. அது இங்கேயே தான் இருக்கும்; இதோ எடுத்துக்கொண்டு ஒரு நொடியில் வந்து விடுகிறேன். நீங்கள் போய் வண்டியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்' என்று இனிமையாகக் கூறி அவரை ஏமாற்ற நினைத்தாள். அவளது புருஷர், 'சரி சரி; நான் இங்கேயிருந்து இவ்வளவு கடுமையாகத் துரிதப்படுத்தும்போதே, ஒரு ஜாம நேரம் ஆகிவிட்டதே! நான் கீழே போய்விட்டால், நீ நாளைய தினந்தான் வண்டிக்கு வருவாய். பெண்டுகளின் சங்கதி எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் பிரயாணம் புறப்படுவதென்றால், ஒரு மலையே நகருவது போல இருக்குமே" என்றார். அந்தச் சமயத்தில், அவள் பட்டு நூலேணியைக் கண்டுபிடித்து, அதைத் தன் கணவர் அறியாதபடி சுருட்டி எடுத்துக்கொண்டவளாய் அப்போதே ஏதோ ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டவள் போல, "சரி; இந்த அறையில் இல்லை. நான் காலையில் ஸ்நானஞ் செய்தபோது வெந்நீர்த் தவலையண்டை அதைக் கழற்றி வைத்ததாக ஒரு நினைவு உண்டாகிறது; எடுத்துக் கொண்டு இதோ வந்துவிட்டேன்' என்று கூறிய வண்ணம் ஸ்நான அறைக்குள் ஒட்டமாக ஒடி, அண்டாவின் மேல் மூடப்பட்டிருந்த தட்டை ஒசையின்றித் தூக்கி, அதற்குள் பட்டு நூலேணியைப் போட்டு, மறுபடியும் தட்டால் வாயைச் சரியாக மூடிவிட்டு 'இதோ கிடக்கிறது மோதிரம்; இனி நாம் புறப்பட்டுப் போகலாம் ' என்று கூறியவண்ணம், அங்கே கிடந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு ஓடிவந்தாள். தனது புருஷர் ஸ்நான அறைக்குள் வராமல் தடுத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தினால் பொறித் தட்டுவதுபோல, அதிசீக்கிரத்தில் அண்டாவைத் திறந்து ஏணியை போட்டுவிட்டு மோதிரத்தை எடுத்துக் கொண்டு ஒடி வந்தாளாதலால் வெந்நீரண்டாவிற்குள் எட்டிப் பார்க்கவாகிலும், தனது கள்ளப் புருஷரிடத்தில் ஏதேனும் இரண்டொரு வார்த்தை சொல்லவாகிலும், அல்லது தனது 4 سمعة. وية