பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - பூர்ணசந்திரோதயம்-1 செய்தனர். அதன்பிறகு, வேறொரு பிரபலமான தாசி வீணைக்கச்சேரி வைத்து நெடுநேரம்வரையில் பாடி அவர்களை ஆனந்த பரவசம் அடையச் செய்தாள். அறுவரும் ஏகாந்தமாக உட்கார்ந்துகொண்டு குதூகலமாகவும் ஆனந்தமாகவும் பேசத் தொடங்கி, "என்ன போங்கள்; பொழுது விடிந்தால் பொழுது போனால், பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு, கேட்ட பாட்டுகளையே கேட்டுக்கொண்டிருப்பது எனக்குச் சீயென்று போய்விட்டது. இத்தனை வருஷகாலமாக நானும் எவ்வளவோ அழகான ஸ்திரீகளைப் பார்த்தாய் விட்டது. இப்போது கிடைக்கும் ஸ்திரீகளிடத்தில் அவ்வளவு பிரியம் உண்டாகமாட்டே னென்கிறது. இதுவரையில் நாம் பார்த்திராத அவ்வளவு புதுமையான அழகுடைய ஸ்திரீ ஒருத்தி கிடைப்பாளானால், ஆகா! அப்போது தான் என் மனம் உண்மையில் ஆனந்தமடையும். முன்னொரு காலத்தில் பாரசீக தேசத்து மகாராஜன், இதுவரையில் மனிதரால் கண்டுபிடிக்கப்படாத புதிய சுகம் ஒன்றை யாராகிலும் கண்டுபிடித்துச் சொன்னால், அவனுக்குத் தம்முடைய ராஜ்ஜியத்தில் பாதியை இனாம் கொடுப்பதாகச் சொன்னாராம். அதுபோல, இதுவரையில் நான் பார்த்திராத அதியற் புத தேஜஸோடு கூடிய ஸ்திரீயை யாராவது காட்டினால், அவர் கேட்கும் பொருளை நான் உடனே கொடுத்துவிடுவேன்' என்றார். சூரக்கோட்டை பாளையக்காரர். அப்படியானால், இந்த ஊரில் தாங்கள் விவரிக்கும் படி புதுமையான அழகுடைய ஸ்திரீகள் இல்லவே இல்லையென்றல்லவாஅர்த்தமாகிறது! இளவரசர் :- ஆம்; அப்படித்தான் இருக்கிறது. சந்தேகமென்ன? நாம் பார்க்காத அப்படிப்பட்ட அபாரமான அழகுடைய புதிய ஸ்திரீ எவள் இருக்கிறாள்? மருங்காபுரி ஜெமீந்தார்:- நம்முடைய இளவரசர் சொல்வது சரியான வார்த்தை. அவருக்குப் பத்து வருஷ காலத்துக்கு