பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பூர்ணசந்திரோதயம்-1 இளவரசர் :- (மிகவும் வியப்பும் திகைப்பும் அடைந்து) என்ன ஆச்சரியம்! நீங்கள் மூன்றுபேரும் சேர்ந்து கொண்டு என்னைப் புரளி செய்கிறீர்களா, அல்லது நிஜமாகவே பேசுகிறீர்களா? அப்படிப்பட்ட புதிய பெண் வந்திருந்தால் அந்தச் சங்கதி இதுவரையில் எனக்கு எப்படியும் எட்டியிருக்குமே? மருங்காபுரி ஜெமீந்தார்:- இவர்கள் சிறியவர்கள்; இவர்களுக்கு எல்லாம் புதுமையாகத்தான் இருக்கும். இவர்கள் இப்படித்தான் புகழுவார்கள். நாம் நேரில் பார்த்தால், அவளுடைய உண்மையான யோக்கியதை எவ்வளவு என்பது உடனே தெரிந்துபோகும். கலி.மிட்டாதார்:- அது நூற்றில் ஒரு பேச்சு மருங்காபுரிக் கிழவர் அவளைப் பார்த்தால், உடனே சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு அப்படியே பிரமித்து நிற்பார். அவளுடைய பெயரைக்கேட்டாலே காதிலும் மனதிலும் ஆனந்தம் ஊறாதா! சோ.இனாம்தார்:- ஆம்; உண்மைதான். பூர்ணசந்திரோதயம் என்று தாசிகள்தான் பெயர் வைத்துக்கொள்ளுவார்களென்று நான் கேள்வியுற்றிருக்கிறேன். அந்தப்பெண் வடதேசத்திலுள்ள தார் வார் மகாராஜாவின் அபிமான புத்திரியாம். அவளும் பூர்ணசந்திரோதயம் என்று பெயர் வைத்துக்கொண்டி ருப்பதைப் பார்த்து அவளும் தாசி வகுப்பைச் சேர்ந்தவளாக இருப்பாளோ என்ற சந்தேகம் உதிக்கிறது. கலி.மிட்டாதார்:- அவளைப் பார்த்தவர்களெல்லோரும் அவள் மகா பரிசுத்தமானவள் என்று எவ்வளவு அபாரமாகப் புகழுகிறார்கள் தெரியுமா? அத்தனைக்கும் அவள் இன்னமும் கலியாணமே செய்து கொள்ளவில்லையாம்! அவளுக்கு ஆசை நாயகனும் ஏற்படவில்லையாம். சேர. இனாம்தார்:- இந்த ஊரிலுள்ள எல்லோரும் அவளுடைய அழகைப்பற்றித்தான் பிரமாதமாகப்