பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53 அடிக்கடி ராஜபாட்டைக்குச் சென்று, அங்கே நடந்தவர்களை யெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தது, அவளுக்கு மாத்திரமே தெரிந்ததன்றி மற்ற எவருக்கும் தெரியாமலிருந்தது. அவ்வாறு அந்த அதிமனோக்கிய அணங்கு நின்றிருந்த சமயத்தில், யாரோ ஒரு யெளவன புருஷர் அந்த மாளிகையின் முன்பக்கத்திலிருந்த வசீகரச் சோலையின் முள்வேலிக்கு அருகில் மறைந்து நின்று அவளது அழகினால் மோகிக்கப்பட்டுத் தன்னையே கூர்ந்து நோக்கியபடி நின்றதை அவள் உணர்ந்து கொண்டாள். உடனே அவளது உருண்டைக் கன்னங்களிலும், கயல் விழிகளிலும், ஒருவித ஜ்வலிப்பு உண்டாயிற்று. ஆனால், அவள் அந்த யெளவன புருஷரைப் பார்க்காதவள் போல நடித்து, கூண்டிலிருந்த ஒரு பஞ்சவர்ணக்கிளியை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அடக்கவொண்ணாத பிரமையோடு அதன் முகத்தில் முத்தமிட்டு, அதனிடத்தில் மழலையாகப் பேசிக் கொஞ்சத் தொடங்கினாள். அவ்வாறு திருட்டுத்தனமாகக் கடைக் கண்ணால் பார்த்தபடியே அந்தக் கோமளாங்கி, தோட்டத்தின் வேலியண்டை நின்ற யெளவன புருஷர் சுமார் முப்பது வயதடைந்தவரென்றும், நல்ல அழகான தோற்றமுடைய வரென்றும், யாரோ பெரிய மனிதரது வீட்டுப் பிள்ளையென்றும் உணர்ந்துகொண்டாள். அவ்வாறு வேலியண்டை மறைந்துநின்ற அந்தயெளவன புருஷர், பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அந்த மனோகர வடிவத்தை முகத்திலிருந்து நகம் வரையில் ஆயிரம் தரம் பார்த்தும், ஆவலடங்காமல் அதிகரிக்கப் பெற்றவராய் மெய்மறந்து நின்றாரானாலும் , அவள் தன்னைக் கவனிக்கிறா ளென்பதை உணராமல் நிலைகலங்கி நெக்கு நெக்குருகி அந்த அதிவிநோதச் சோலையில் சிங்கார மாடத்தில் பஞ்சவர்ணக் கிளியோடு அந்த யெளவன மடவன்னம் கொஞ்சி நின்றதான தெய்வலோகக் காட்சியில் ஈடுபட்டு, சுவர்க்க லோகத்தின்