பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பூர்ணசந்திரோதயம்-1 உன்னுடைய கண்களின் பார்வை ஜிலுஜிலென்று எவ்வளவு குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கிறது! நீ பார்க்கும் ஒரு பார்வையில் ஆண்பாலருடைய மனசும், உடம்பும் அனலில் வைத்த வெண்ணெய் போல ஒர் இமைப் பொழுதில் கரைந்துபோய் விடுகிறதே! அப்படி இருக்க, உன்னுடைய மனசும் நல்ல இளகிய மனசாகவே இருக்கவேண்டு மன்றி வேறு விதமாக இருக்காது. அடைக்கலமென்று உன்னிடத்தில் யாசகம் கேட்க வந்திருக்கும் என்னிடத்தில் நீ கடுமையாகப் பேசுவது தரும மாகாது. நான் சொல்வதைத் தயை கூர்ந்து கொஞ்சம் கவனிக்க வேண்டும். அதுதான் நான் கேட்டுக்கொள்ளும் முதல் தியாகம்” என்று மிகவும் நயமாகக் கூறினார். அதைக்கேட்ட பெண்பாவை கம்பீரமாகவே தனது ஸோபா வின் மேல் மறுபடியும் உட்கார்ந்து கொண்டவளாய் அவரை நோக்கி "சரி; கவனித்தே கேட்கிறேன். சொல்லலாம்' என்று அமர்த்தலாகப் பேசினாள். உடனே அந்த யெளவன புருஷர் தமது பற்களையெல்லாம் காட்டிக் கெஞ்சியவண்ணம், 'பெண்ணே நான் பேசுவதை நடுவில் தடுக்காமல், கடைசிவரையில் பொறுமையோடு கேட்கிறதாக நீ முதலில் வாக்களிக்க வேண்டும்' என்றார். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம், 'அப்படிப்பட்ட வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை. தாங்கள் பேசுவது மிகவும் ஆச்சரியமாகவும், நான் இதுவரையில் கேட்டிராத தாகவும் இருக்கிறது. என்னுடைய கிளி தப்பி ஓடியதைப் பிடித்துக் கொணர்ந்ததான தற்செயலான ஒரு சிறிய சம்பவத்தி லிருந்து எனக்கும் தங்களுக்கும் இப்போதுதான் பழக்கம் ஏற்படுகிறது. நானும் தாங்களும் முதன்முதலாகச் சந்தித்து இன்னும் அரை நாழிகை நேரம்கூட ஆகவில்லை. அப்படிப் பட்ட முகமறியாத மனிதர்களான நம்மிருவருக்குள் இப்படிப் பட்ட ஆட்சேபகரமான விஷயங்களைக் குறித்த பேச்சு நடப்பது