பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 69 சுத்த அசம்பாவிதமாக இருக்கிறது என்று கண்டிப்பாகக் கூறினாள். - உடனே கலியாணபுரம் மிட்டாதார், "பெண்ணே இன்னமும் நீ கோபமாகவே பேசுகிறாய்! நீஅப்படிக் கோபித்துக்கொள்ளும் படியாக நான் என்ன தவறு செய்துவிட்டேன் ஒன்றுமில்லையே. நான் சொல்லப்போகும் வார்த்தைகளைப் பொறுமையாகக் கேட்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நீ எனக்கு இந்த ஒர் அற்பமான வரத்தைக் கொடுக்கக்கூடாதா? நான் பேசும் வார்த்தைகள் உனக்கு ஆச்சரியமாகவும் எதிர்பாராதவையாகவும் இருக்கலாம். இருந்தாலும், நான் என்னுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லுகிறேன். அதைக் கேட்பாயானால், உடனே உன் மனம் திருப்தி யடைந்து விடுமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்' என்றார். பூர்ணசந்திரோதயம் “கொஞ்சநேரத்துக்கு முன்தாங்கள் என் விஷயத்தில் எடுத்துக் கொண்ட பிரயாசையையும் செய்த உதவியையும் கருதியே, நான் தங்களிடத்தில் இதுவரையில் மிகவும் பொறுமையாக நடந்துகொண்டிருக்கிறேன். அப்படி இல்லாதிருந்தால் இவ்வளவு தூரம் தாங்கள் பேச இடமே கொடுத்திருக்க மாட்டேன். சரி; சொன்னதை யெல்லாம் சொல்லிவிட்டீர்கள். இனி என்னபாக்கியிருக்கிறதோ, அதையும் சொல்லி விடுங்கள். நான் இன்னமும் கொஞ்சநேரம் பொறுமையோடு கேட்கிறேன்' என்று வேண்டாவெறுப்பாகப் பேசினாள். உடனே கலியாணபுரம் மிட்டாதார், அவளை மிகவும் உருக்கமாகவும் பரிதாபமாகவும் நோக்கி, 'பெண்ணே நான் உன்னை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நீ என்றையதினம் இந்த ஜெகன் மோகன விலாசத்தில் வந்து இறங்கினாயோ, அன்றைய தினமே நான் உன்னைக் கண்டேன். அது முதல் இந்த நிமிஷம் வரையில் நான்