பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பூர்ணசந்திரோதயம்-3 உன்னை அனுப்பிவிட்டதாகத் தாண்டிக் குதிக்கிறாய்; ஒன்றரை முழ நீளம் எனக்கு உபதேசம் பண்ணுகிறாய். நானும் இதுவரையில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். நீ இவ்வளவு தூரம் பேசினாய். நான் அதையெல்லாம் சாவதானமாகக் கேட்டுவந்தேன். நான் சொல்லப்போவதையும் நீ கொஞ்சம் சாவதானமாகக் கேள். கிழவனுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு வீணாகக் கெட்டுப் போகாதே. அவனுடைய தைரியத்தை வைத்துக் கொண்டு நீ என் மனசுக்கு விரோதமாக என்னைவிட்டுப் பிரிந்து போவது என்றால் நீ என்னோடு வெளிப்படையான யுத்தத்திற்கு ஆரம்பிப்பது போல் ஆகும். உன்னுடைய ஆசைநாயகரான ஜெமீந்தார் இன்னார் என்பதை நான் அப்போதே அறிந்து கொண்டேன். நாம் அன்றைய தினம் இரவில் மைசூருக்குப் புறப்பட்டுப்போன காலத்தில் நான் வந்துவிட்டேன் என்று பயந்து நீ அவரை வென்னீர் அண்டாவுக்குள் ஒளிய வைத்தாய்; அப்படி வைத்தவள் அவ்வளவோடு சும்மா இருக்காமல், உன்னுடைய நகைப் பெட்டியை அந்த அண்டாவின் வாயில் வைத்து மூடினாய்; அந்த சமயத்தில் அவர் வாய்விட்டுப் பேசினால் உன்னுடைய மானம் போய் விடும் என்று நினைத்து, தம் உயிர் போனாலும் போகட்டும் என்று எண்ணி அவர் மெளனமாக இருந்து மூச்சுவிட மாட்டாமல் மரண வேதனைப்பட்டு இறந்து போயிருக்கிறார். வேறே யாராக இருந்தாலும், அந்த மரண வேதனை காலத்தில் வேறே எதையும் எண்ணாமல் பெட்டியைக் கீழே தள்ளி விட்டுத் தாம் பிழைத்துக் கொள்வதையே பார்த்திருப்பார். நீ என்ன செய்தாய்? பெட்டியை வைத்து அண்டாவின் வாயை மூடிவிட்டால், அவர் மூச்சு விடமுடியாமல் இறந்து போய் விடுவார் என்பது உனக்குத் தெரியும். ஆனாலும், உன்னுடைய மானம் தப்பவேண்டும் என்ற ஒரே நினைவைக் கொண்டு, அவர் எப்படியாவது போகட்டும் என்று நினைத்து நீ பெட்டியை வைத்தாய். உடனே அவர் இறந்துபோய் விட்டார். அவருடைய