பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பூர்ணசந்திரோதயம்-3 கொஞ்சநேரத்துக்கு முன்னேதான், நான் இன்னொரு புதிய சங்கதி கேள்வியுற்றேன். இளவரசர், இந்தக் கிழவர் ஆகிய இருவருக்கும் மாத்திரம் பூர்ணசந்திரோதயம் இணங்கி விட்டாள் என்று ஒரு மனிதன் எனக்குச் சொன்னார் என்றார். இனாம்தார், "என்னிடத்தில்கூட ஒரு மனிதன் நேற்றைய தினம் அதே சங்கதியைத் தெரிவித்தான். நான் அப்படியும் இருக்குமோ என்று சந்தேகித்துக் கொண்டிருந்தேன். இப்போது நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அந்த வதந்தியிலும் ஏதாவது நிஜமிருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது” என்றார். மிட்டாதார், "வாஸ்தவந்தான். கொஞ்சமாவது நெருப்பில்லா விட்டால், புகை உண்டாகாது அல்லவா? அதிருக்கட்டும்; உங்களுக்கு இந்தச் சங்கதியைச் சொன்ன மனிதர் யார்? அதைச் சொல்லுங்கள்' என்றார். இனாம்தார், "வேறே யாருமில்லை. நம்முடைய பஞ்சண்ணா ராவ் இருக்கிறார் அல்லவா? அவனையும் அவனுடைய கையாளான ராமனையும் அமர்த்தி, பூர்ண சத்திரோதயத்தின் நடவடிக்கைகளை எல்லாம் கவனித்து உடனுக்குடன் என்னிடம் வந்து தெரிவிக்கும் படி ஏற்பாடு செய்திருந்தேன். அவர்கள்தான் இந்த விஷயத்தைச் சொன்னவர்கள். உங்களுக்குச் சொன்னது யார்?' என்றார். மிட்டாதார், “என்ன ஆச்சரியம்! எனக்கும் இந்த விஷயத்தை அவர்கள்தான் சொன்னார்கள். நானும் அவர்களைத்தான் அமர்த்தியிருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் சரியாக நடந்து கொள்ளுகிறார்கள் போல் இருக்கிறது. அதிருக்கட்டும்; இந்த விஷயமாக அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்? அன்றைய தினம் ராத்திரி பூர்ணசந்திரோதயமே இந்த மருங்காபுரியார் மாளிகைக்கும் இளவரசருடைய உப்பரிகைக் கும் போய் விட்டு வந்தாள் என்று தானே சொன்னார்கள்?" எனறாா.