பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 68 - பூர்ணசந்திரோதயம்-3 ஜெமீந்தார், அதெல்லாம் லாகலமாக இருக்கும். பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அதிலும் பூர்ண சந்திரோதயத்துக்குத் தெரியாத தந்திரமா? சமுத்திரத்தின் ஆழத்தைக் கண்டுபிடித்தாலும் பிடிக்கலாம், இந்தப் பெண் பிள்ளைகளுடைய மனசின் ஆழத்தை மாத்திரம் காண முடியாது என்று நம்முடைய முன்னோர்கள்தான் சொல்லி இருக்கிறார்களே பூர்ணசந்திரோதயம் எப்படிப்பட்ட காரியத்தையும் செய்யக் கூடியவள்; பாளையக்காரர் தாம் ஜெயமடைந்து விட்டதைக் குறித்து எழுத்து மூலமான உறுதியான ஆதாரம் தம்மிடத்தில் இருப்பதாக என்னிடம் இப்போதுதான் சொன்னார். ஆனால் அந்த ஆதாரம் இன்னது என்பதை அவர் இப்போது விரிவாகச் சொல்ல மாட்டேன் என்கிறார். பூர்ணசந்திரோதயம் பார்வைக்கு எவ்வளவு பகட்டாகவும் வசீகரமாகவும் இருக்கிறாளோ, அதுபோல அவள் காரியத்திலும், கபடமும், ஏமாற்றமும் நிறைந்தவளாகத் தான் இருப்பாள்' என்றார். இளவரசர், 'நீங்கள் சொல்வதைக் கேட்கக் கேட்க, அவள்மேல் என் மனசிலும் ஒருவித சந்தேகம் தோன்றுகிறது. அவள் சொன்னதைக்கேட்டு நான் முதலில் இந்தப் பாளையக் காரரின் மேல் நிரம்பவும் ஆத்திரமடைந்து, இவருடைய முகத்திலேயே இனி முழிப்பதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டேன். ஆனால் இவருடைய அழைப்புக் கடிதத்தைப் பார்க்க, நான் அடைந்த ஆச்சரியம் கொஞ்ச நஞ்சமல்ல. இருந்தாலும், இங்கே வந்து இவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்டு அதற்குமேல் இவரிடத்தில் பகைமை பாராட்டவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு புறப்பட்டு வந்தேன். இதை எல்லாம் ஆழ்ந்து யோசிக்க யோசிக்க பூர்ணசந்திரோதயம் கபடமும் வஞ்சகமும் பூர்த்தியாக நிறைந்த பெருத்த நடலக்காரி என்ற எண்ணமே தலையெடுத்து நிற்கிறது" என்றார்.