பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பூர்ணசந்திரோதயம்-3 போடப்பட்டிருந்த ஓர் உன்னத ஆசனத்தில் உட்கார்ந்தார். உட்கார்ந்தவர் உடனே தமது சட்டைப்பைக்குள் கையை விட்டு அதற்குள் சுருளாகக் கிடந்த ஒரு காகிதக்கட்டை வெளியில் இழுத்து அதைப் பிரிக்க, அவ்வளவும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தன. அவர் அவைகளை வெளிப்படையாக வாய்விட்டு எண்ணிமுப்பது ஆயிரம் நோட்டுகள் இருக்கின்றன என்று காட்டிய பின் அவைகளைத் தமக்கெதிரில் இருந்த மேஜையின்மீது வைத்தவராய் எல்லோரையும் பார்த்து, “நண்பர்காள் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட முப்பதினாயிரம் ரூபாயும் இதோ இருக்கிறது. நாம் அன்றையதினம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தப் பணத் தொகையை அடையும் உரிமையையும் பாத்தியதையையும், தாம் சம்பாதித்துக் கொண்டதாக மெய்ப்பிக்கும் அதிர்ஷ்டசாலி எவரோ அவருக்கு நான் இந்தத் தொகையை உடனே கொடுத்து விடக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். நான் உங்கள் சபாநாயகர் ஹோதாவில் ஒரு விஷயம் மாத்திரம் உங்களிடம் கேட்டுக்கொள்ளுகிறேன். இப்போது வெளியாகப் போகும் விஷயம் எவருடைய மனசுக்காவது ஆத்திரத்தை உண்டாக்கக் கூடியதாக இருந்தாலும், கொஞ்சம் பொறுமையோடு இருந்து, நடுநிலை தவறாத நியாயம் எதுவோ, அதன்படி நாம் இந்த விஷயத்தை முடிப்பதற்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். அதுவுமன்றி பொதுவாக எல்லோருமே, நமக்குள் இருந்துவரும் சிநேகப்பான்மைக்கு ஒவ்வாத வார்த்தைகளுக்காவது, செய்கைகளுக்காவது இடம் கொடாமல் தமாஷாக இருந்து இந்தக் காரியத்தைப் பூர்த்தி செய்விப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார். அதைக் கேட்ட பாளையக்காரர் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து, "சரியான வார்த்தை. இப்படிப்பட்ட ஆழ்ந்த விவேகமும் உலக ஞானமும் இருப்பதனாலேதான், நான் இதற்கு நம்முடைய பெரியவரை நியமித்தது' என்று கூறிப் புகழ்ந்தார்.