பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பூர்ணசந்திரோதயம்-3 துன்பங்கள் எல்லாம் உண்டாக வேண்டுமென்ற பிரியம் உனக்கு இருக்குமானால், அதையும் சொல்லிவிடு. நான் இதற்குமேல் ஒரு வார்த்தை கூடப் பேசுகிறதில்லை. உடனே புறப்பட்டுப் போய்விடுகிறேன். அம் மாளு :- (திகில் கொண்டு முற்றிலும் கலங்கிக் கலகலத்துப் போய்ச் சிறிது தயங்கி நின்ற பிறகு நயமாகப் பேசத் தொடங்கி) நான் அறியாத பெண்பிள்ளை, ஏதோ தெரியாத் தனத்தினால் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அதை வைத்துக்கொண்டு நீங்கள் என்னை எவ்வளவு தூரம் பயமுறுத்தி விட்டீர்கள்! பரோபகாரம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு வந்த நீங்கள் இவ்வளவோடு திரும்பிப்போய் விடுவீர்கள் என்று நான் நினைத்தால், என்னைப் போன்ற முட்டாள் வேறே யாராவது இருப்பார்களா? அப்படி நான் நினைக்கவில்லை. இவ்வளவு அபாரமான தயாள குணம் நிறைந்த நீங்கள் எங்களுடைய விஷயத்திலும் தயாளமாகவே நடப்பீர்கள். ஆகையால், நீங்கள் பூனாவுக்குப்போய் எங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டீர்கள் என்ற ஒரு தைரியத்தை வைத்துக் கொண்டு நான் உங்களிடம் உரிமை பாராட்டிப் பேசினேனே அன்றி வேறொன்றுமில்லை. நான் பேசியதை மனசில் வைத்துக் கொள்ள வேண்டாம். நாங்கள் செய்ய உத்தேசித்திருக்கும் சதி ஆலோசனையை நீங்கள் நன்றாக அறிந்து கொண்டி ருக்கிறீர்கள். ஆகையால், இனி எங்களுடைய ஜெபம் சாயப் போகிறதில்லை. இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு ஒர் உறுதி ச்ெய்து கொடுக்கிறோம். அதற்காகவாவது நீங்கள் இணங்க வேண்டும். நாங்கள் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இனிமேலும் நாங்கள் புறப்பட்டுப் பூனாவுக்குப் போய், லலிதகுமாரிதேவியிடம் வேலையிலமர்ந்து நாணயமாக நடந்து கொள்ளுகிறோம். எங்களுடைய சதியாலோசனையை நாங்கள் நிறைவேற்றாமல் இதோடு மறந்துவிடுகிறோம். எல்லா விஷயமும் வெளியாகிவிட்டது. ஆகையால், நம்முடைய --ச்சை சிறைவேற்ற முடியவில்லை என்று நான் என்னுடைய