பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鱼80 பூர்ணசந்திரோதயம்-3 முயற்சியைப் பற்றி என்ன சொல்லுகிறான் என்பதைக் கேட்கிறேன்' என்றார். உடனே சாமளராவ் எழுந்து நின்று, 'பூர்ணசந்திரோதயம் என்ற அந்த அம்மாள் இப்போது என்னுடைய எஜமானி ஆகிவிட்டார்கள். ஆகையால், நான் அவர்கள் விஷயத்தில் காதல் சம்பந்தமான வார்த்தைகளைவாயில் வைத்துப் பேசுவதே தகாத காரியம். ஆகையால், அதை வாயில் வைத்து அதிகமாக விஸ்தரித்துப் பேச நான் விரும்பவில்லை. நான் இந்தப் பந்தயத்தில் தோற்றுப் போனதாகவே நீங்கள் எண்ணிக் கொள்ளலாம். அது நிற்க, இது சம்பந்தமாக நான் இன்னொரு விஷயத்தைத் தெரிவித்துக் கொள்ளப் பிரியப்படுகிறேன். நாம் இதுவரையில் எத்தனையோ பெண்களைப் பற்றித் தாறு மாறாகப் பேசி தப்பான, அல்லது உண்மையான் பற்பல அபிப் பிராயங்களை வெளியிட்டு மனம் போனபடி பேசியிருக்கிறோம். அதாவது, நாம் எப்போதும் ஒரு தலைச் சார்பாகவே பேசியிருக் கிறோம். நாம் அவதூறாகப் பேசும் பெண்கள் இல்லாத இடத்தில் அவர்களுக்குத் தெரியாதபடி நாம் தாறுமாறாகப் பேசி இருக்கிறோம். அவர்கள் நேரில் இங்கே இருந்தால், அவர்கள் தங்களுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லி இருப்பார்கள் என்பது நிச்சயம். அதுபோலவே, இந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் ஒருதலைச் சார்பாகப் பேசி முடிவு கட்ட நான் இணங்க மாட்டேன். இப்போது நான் அந்த அம்மாளுடைய பிரதிநிதி ஸ்தானத்தில் இருப்பதாலும், அவர்களுடைய உண்மையான யோக்கியதையும் அந்தஸ்தும் இன்னது என நான் தெரிந்து கொண்டிருப்பதாலும், நம்முடைய பாளையக்காரர் சொல்வது உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் மேலாடுகிறது. ஆகையால், அவர் சொல்வதை ஒப்புக் கொள்ளுமுன் அதை மெய்ப்பிக்கத் தகுந்த போதுமான ஆதாரம் இருக்கிறதா என்பதை நாம் பார்த்து ஆராய வேண்டும். அப்படி ஆராயாமல் இந்த விஷயத்தை முடிவு செய்ய நீங்கள் யாரும்