பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 i 2 பூர்ணசந்திரோதயம்-3 இப்போது என்னால் சகிக்கமுடியாதபடி அவ்வளவு அதிக மும்முரமாக எழுந்து என்னை ஆட்டிவைக்கிறது. ஆகையால், நான் உங்களை விட முடியவில்லை. எப்படியாவது நீங்கள் என்னுடைய பிரியத்தை ஏற்றுக்கொண்டு, என்னைக் காப்பாற்ற வேண்டும். அப்படியில்லாமல், நீங்கள் என்னை வெறுத்து உங்களுடைய பிரியத்தை என்மேல் வைக்க மறுத்தால், என் மனம் முறிந்துபோய் என்னுடைய ஆழ்ந்த காதலையெல்லாம் கால கோடி விஷத்தை ஒத்த பகைமைக்குச் சமமாக மாற்றி விடும்" என்று நிரம்பவும் உருக்கமாகவும் உறுதியாகவும் கூறிய வண்ணம் அவனை முன்னிலும் அதிக உரமாகப் பிடித்துக் கொண்டாள். - அவளது கொடிய சொற்களைக்கேட்ட கலியாணசுந்தரம் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த கலவரமும் சஞ்சலமும் அடைந்தவனாய், “இந்திராபாயீ உன்னுடைய அறிவு சரியான நிலைமையில் தான் இருக்கிறதா? அல்லது, உனக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறதா? நீ இப்போது செய்யும் காரியமும், பேசும் பேச்சுகளும் கேவலம் ஒரு ராட்சசிக்கேதகும். அன்றி, நற்குணமுள்ள சாதாரண ஸ்திரீகளுக்குத் தகுந்தவையாக இல்லையே! நீ திக்கற்ற பரிதாபகரமான நிலைமையில் இருக்கிறாய் என்று எண்ணி உன்மேல் இரங்கி நான் உன்னைப் பிடித்துக்கொண்டேனன்றி வேறல்ல. கேவலம் பெண் பிள்ளையான உன்னிடத்தில் நான் இப்போதும் பலாத்காரத்தை உபயோகிக்கப் பின்வாங்குகிறேன் ஆகையால், நீ என்னை விட்டுத் துர நகர்ந்து கொள். அநாவசியமாக என் கோபத்தை மூட்டாதே. அதன்பிறகு நீ பெண்பிள்ளை என்பதைக் கூட மதியாமல், நான் என் முரட்டுத் தனத்தைக் காண்பித்து உனக்கு நற் புத்தி உண்டாகும் படி செய்துவிடுவேன்; ஜாக்கிரதை' என்றான். அதைக் கேட்ட அந்தப் பெண் கட்டிலடங்கா ஆவேசம் கொண்டவள்போல மாறி, "ஒகோ அப்படியா என்னோடு